செங்கோட்டையன் தவெகவில் சேர்ந்தது கோபி மாவட்டத்தையே தலைகீழாக மாற்றியிருக்கிறது என்றும் தற்போதைய கள நிலவரப்படி அவர் போட்டியிடும் தொகுதியில் வெற்றி வாய்ப்பு 70–80% வரை இருக்கிறது என்று தவெக உள் கணிப்புகள் கூறுகின்றன. ஈரோடு மாவட்டத்தில் தவெக 2–4 தொகுதிகளை கைப்பற்றும் வாய்ப்பும் பிரகாசமாக உள்ளது என்கிறார்கள் தவெகவினர்.
இந்நிலையில், தவெகவின் செயல்பாடுகள், கட்சியின் மாவட்ட செயலாளர்களும், நிர்வாகிகளும் பொதுமக்களிடம் பரீட்சயமாக இருக்கிறார்களா? என்பதை ஆலோசிக்க ஆதவ் அர்ஜுனாவின் அலுவலகத்தில் ஒரு கூட்டம் நடந்தது. முதல் நாள் கூட்டத்துக்கு வந்த விஜய் அடுத்த நாள் கூட்டத்தை செங்கோட்டையனையே நடத்த சொல்லிவிட்டாராம். அந்த கூட்டத்தில் ஆதவ் அர்ஜுனாவின் நிறுவனம் எடுத்திருக்கிற ஒரு சர்வேயில் பெரும்பாலான நிர்வாகிகள் பொதுமக்களோடு சம்பந்தமில்லாதவர்களாக இருக்கிறார்கள். நிர்வாகிகள் யாரென்றே தெரியவில்லை என ரிசல்ட் வந்து இருக்கிறது. பல மாவட்ட செயலாளர்கள் திமுகவுடனும், அதிமுகவுடனும் நெருங்கிய உறவில் இருப்பதாகவும், சிலர் திமுக, அதிமுக நிர்வாகிகளின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் சர்வேயில் தெரியவந்துள்ளது.