இப்போதும் அந்நியனாக மாறி எடப்பாடி பழனிசாமியின் அதிருப்தியை பாஜக டெல்லி தலைமைக்கு அதிமுக தொடர்ந்து தெரியப்படுத்தி வந்ததால் பீகார் தேர்தல் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில், இனி பாஜகவின் கவனம் தமிழ்நாடு மீதும், மேற்கு வங்கம் மீதும் இருக்கும் என்றும், டிசம்பர் மாதத்தில் திமுக அமைச்சர்கள் மீது அடுத்தடுத்து நடவடிக்கைகள் ஆரம்பமாகும் என்றும் பாஜக மேலிடம் உத்தரவாதம் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் கோவை வந்த பிரதமர் மோடியை அதிமுக பொதுச்செயலாளரும், என்.டி.ஏ கூட்டணியின் தமிழக முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி விமான நிலையத்தில் வரவேற்றார். அப்போது மோடியிடம் மேலும் பல கோரிக்கைகளை அம்பியாக மாறி எடப்பாடி பழனிசாமி மனுவாக கொடுத்திருக்கிறார் என்கிறார்கள். அவை எல்லாமே தமிழக நலன் சார்ந்த கோரிக்கைகள். நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 22 சதவிகிமாக உயர்த்தி அறிவிக்க வேண்டும். தமிழக மீனவர்களை இலங்கை சிறைகளில் இருந்து விடுதலை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தமிழக நலன் சார்ந்த கோரிக்கைகளை கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.