நாட்டின் பொருளாதார அமைப்பு, பஹல்காம் தாக்குதல், நாட்டின் அரசியல் அமைப்பு, உலகளாவிய நிலைமை உள்ளிட்ட பல சமீபத்திய பிரச்சினைகள் குறித்து ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் இந்த நிகழ்வில் பேசினார். முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உட்பட பல முக்கியத் தலைவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
மோகன் பகவத் தனது உரையின் போது, ‘‘நாட்டின் தற்போதைய பொருளாதார அமைப்பில் சில குறைபாடுகள் இருக்கின்றன. இந்த முறை ஒரு சில தனிநபர்களால் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன் விளைவாக ஏழைகள் ஏழைகளாகவும், பணக்காரர்கள் பணக்காரர்களாகவும் மாறுகிறார்கள். இந்தக் குறைபாடுகள் நாட்டில் ஒரு புதிய சுரண்டல் முறையை உருவாக்குகின்றன.