இந்நிலையில், திடீர் திருப்பமாக திருச்சி மண்ணச்சநல்லுார் அதிமுக முன்னாள் எம்எல்ஏ பரமேஸ்வரி தம்பி ராஜா, அவரது மனைவி கிருஷ்ணவேணி மற்றும் சிலரை திடீரென விசாரித்துள்ளனர். இதுபற்றி போலீஸ் அதிகாரி கூறுகையில்;- ராமஜெயம் கொலை செய்யப்பட்ட அதே பாணியில் 2 பேரை புல்லட் ராஜா தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து செய்துள்ளார். இந்த இரண்டு சம்பவத்திலும் கொலையானவர்கள் கைகள் கம்பியால் கட்டப்பட்டிருந்தன. இது ராமஜெயம் கொலை செய்யப்பட்ட பாணியில் இருந்ததால், புல்லட் ராஜாவையும், மற்றவர்களையும் விசாரித்தோம் என தெரிவித்தார்.