அதிமுக ஆரம்பிக்கப்பட்ட காலம் முதலே ஈரோடு அதிமுகவின் கோட்டையாக தான் இருந்து வருகிறது. அதிலும் 1989ல் இரட்டைஇலை சின்னம் இல்லாமல் அம்மா அவர்கள் சேவல் சின்னத்தில் நின்று ஈரோடு மாவட்டத்தில் 5 தொகுதிகளை வென்றார். ஆனால் இப்போது இரட்டை இலை இருந்தும் திமுக மீது அதிருப்தி இருந்தும் வேறு யாரும் போட்டியிடாத சூழ்நிலையிலும் 67000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது.