Premalatha Vijayakanth Criticizes DMK: சேலம் மாவட்டத்தில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பிரேமலதா விஜயகாந்த், திமுக ஆட்சியின் தவறை சுட்டிக்காட்டியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழகத்தில் பிரச்சாரங்களும் தீவிரம் அடைந்துள்ளது. அந்த வகையில், சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற அரசியல் கூட்டம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த கூட்டத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு உரையாற்றினார். இதில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினும் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
26
திமுக மீதான குற்றச்சாட்டு:
இந்த கூட்டத்தில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், திமுக அரசைப் பற்றியும் அதன் செயல்பாடுகளைப் பற்றியும் தனது கருத்துகளை வெளிப்படுத்தினார். திமுக அரசின் செயல்பாடுகள் குறித்து பொதுமக்கள் மத்தியில் பல்வேறு கருத்துக்கள் இருப்பதாக அவர் குறிப்பிட்டார். எதிர்க்கட்சிகள் திமுக மீது சுமத்தும் ஒரே குற்றச்சாட்டு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதும், போதைப்பொருள் பயன்பாடும் என இந்த கருத்தை ஆதரிப்பது போல் இவர் பேசியது தான் அங்கு சலசலப்பு ஏற்பட காரணமாக அமைந்தது.
36
பெண்கள் பாதுகாப்பு:
மேலும் தற்போது திமுக கூட்டணியின் வலது கரமாக அண்ணனுக்கு தேமுதிக உள்ளது, எனவே பெண்களுக்கு எந்த ஒரு பிரச்சனை என்றாலும் அதனை அவரது தங்கையாக நான் தட்டிக்கேட்பேன். எல்லா இடங்களிலும் சிசிடிவி நிறுவி பெண்களின் பாதுகாப்பை செய்ய சொன்னால், அண்ணன் உருவாக்கி தருவார் என கூறினார். அதே போல் போதைப்பொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்துவது எந்த ஒரு அரசுக்கும் சவால்தான், தமிழகத்தில் கண்டிப்பாக போதைப்பொருள் கட்டுக்குள் கொண்டுவரப்படும் என உறுதியளிப்பதாக தெரிவித்தார்.
46
விஜய் மீது விமர்சனம்:
அதே போல் நடிகர் விஜயின் அரசியல் வருகையை மறைமுகமாக விமர்சனம் செய்த பிரேமலதா, அரசியல் என்பது அனுபவமும் பொறுப்புணர்வும் தேவைப்படும் தளம்; புதிதாக அரசியலுக்கு வருபவர்கள் மக்களின் பிரச்சினைகளை ஆழமாக புரிந்து கொள்ள வேண்டும் என்றார். வெறும் பிரபலத்தன்மை மட்டும் அரசியலில் வெற்றி பெற போதாது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
56
வெளிப்பட்ட நம்பிக்கை:
அதே நேரத்தில், திமுக தலைமையிலான கூட்டணிக்கு தனது ஆதரவை வெளிப்படுத்திய அவர், வரும் தேர்தலில் இந்த கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்ற நம்பிக்கையையும் தெரிவித்துள்ளார். 200-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறும் என்ற உறுதியுடன் அவர் பேசியது, கூட்டத்தில் கலந்து கொண்ட ஆதரவாளர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியது.
66
புதிய திருப்பம்:
சேலத்தில் நடைபெற்ற இந்த கூட்டம், தமிழக அரசியலில் புதிய திருப்பங்களை உருவாக்கும் முன்னோட்டமாகவே பார்க்கப்படுகிறது. அதற்கு முக்கிய காரணம், கூட்டணியில் இருந்தாலும் திமுகவின் தவறை சுட்டிக்காட்டும் விதத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேசியது தான். இவரது இந்த புத்திசாலித்தனமான அணுகுமுறையை அரசியல் விமர்சகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.