இந்த தருணத்தில் மக்கள் நீதி மய்யம் தொழிலாளர் நல அணியின் முதல் மாநில செயலாளராக பொறுப்பு வழங்கியதோடு, ஒரு அரசியல் கட்சிக்கு மிக முக்கியத் தேவையான தலைமை தொழிற்சங்கம் உருவாக்குவதற்கான மிகப்பெரிய பொறுப்பையும் என் மீதான நம்பிக்கையின்பால் தலைவர் நம்மவர் அவர்கள் வழங்கிய போது அதனை சிரமேற் கொண்டு செய்து முடித்து அதனை அவரிடம் சமர்ப்பித்தது மட்டற்ற மகிழ்ச்சி. மேலும் பொருளாதார பின்புலம் இல்லாத சாமானியனான என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து 2021ம் ஆண்டு நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் சென்னை பெரம்பூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்த தலைவர் நம்மவர் அவர்களுக்கும், என் மீது மிகுந்த அக்கறையோடு தொடர்ந்து என்னை ஊக்குவித்து வந்த துணைத் தலைவரும், ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியுமான மரியாதைக்குரிய ஏ.ஜி.மெளரியா ஐபிஎஸ் அவர்களுக்கும் மற்றும் கட்சியின் ஏனைய நிர்வாகிகளுக்கும் உறுப்பினர்களுக்கும் மய்ய உறவுகளுக்கும் இந்த நேரத்தில் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.