சரி இப்ப விஷயத்துக்கு வருவோம். அந்த செல்வாக்கையும், அந்தப் பதவிகளையும், அந்த பவரையும் வைச்சிக்கிட்டு அவர் என்ன சொன்னார் தெரியுமா? இவ்வளவு செல்வாக்கு, இவ்வளவு பதவிகள், இவ்வளவு பவர் இருந்தா நான் ஒரு அஞ்சு பைசா காசு சம்பாதித்து இருப்பேனா? எனக்கோ இல்ல, என் குடும்பத்துக்கோ பட்டங்கள் வேணும், பதவி வேண்டும். ஏதாவது கேட்டு இருப்பாரா? இல்லையென்றால் லாபம் பார்த்திருப்பாரா? நான் எதுக்காவது ஆசைப்பட்டு இருப்பனா? ஆனால் அவர் பெயரை சொல்லிக்கிட்டு, அவருடைய கொள்கையை ஃபாலோ பண்றதா சொல்லிக்கிட்டு, இப்ப ஆட்சியில் இருக்கிறவங்க என்னவெல்லாம் செய்றாங்க. அதனாலதான் சொல்றேன், பெரியார் பெயரை சொல்லிக்கொண்டு தயவு செய்து கொள்ளை அடிக்காதீங்க ஐயா. தயவு செஞ்சு கொள்ளை அடிக்காதீங்க. அவர் பெயரை சொல்லிக்கிட்டு, பெரியார் பெயரை சொல்லி கொள்ளை அடிக்கிற இவங்கதான் நம்முடைய அரசியல் எதிரி.