‘‘நாங்கள்தான் மீண்டும் மீண்டும் வெல்வோம். எங்களின் சாதனைகளை நாங்களே மிஞ்சும் அளவுக்கு 2.0 ஆட்சி இருக்கும்தமிழ்நாட்டு மக்கள் எங்கள் மீது நம்பிக்கை கொண்டுள்ளனர்’’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், ‘‘நாங்கள்தான் மீண்டும் வருவோம். நாங்கள்தான் மீண்டும் மீண்டும் வெல்வோம். எனக்கும், எனது மனசாட்சிக்கும் கட்டுப்பட்டு பல்வேறு நலத்திட்டங்களை தீட்டி வந்திருக்கிறேன். திராவிட மாடல் அரசுதொடர வேண்டும் என்று மக்கள் முடிவு செய்து விட்டார்கள். என்ன சீண்டிப் பார்ப்பவர்கள் மகிழ்ச்சி அடையலாமே தவிர, அது என்னை ஒன்றும் செய்யாது. அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, எம்ஜிஆர், அம்மையார் ஜெயலலிதா எதிர்கொள்ளாத நெருக்கடியை நான் எதிர்கொள்கிறேன். அவர்கள் ஆட்சிக்காலத்தில் இருந்த ஆளுநர்கள் இப்படியில்லை.