தைலாபுரத்துக்கே மோடி நேரில் அதிரடி விசிட்..! அப்பா- மகனை கைப்பிடித்து சேர்த்து வைக்க பக்கா ஸ்கெட்ச்..!

Published : Nov 18, 2025, 08:05 PM ISTUpdated : Nov 18, 2025, 08:12 PM IST

வடமாவட்டங்களின் முக்கிட வாக்கு வங்கியான வன்னியர் சமுதாய வாக்குகள் சிதிறினால் அது திமுகவிற்கு சாதகமாகி விடும். ஆகையால் தந்தை, மகன் விரிசலை அகற்றி பாமகவை ஒன்றிணைக்க வேண்டும்.

PREV
14

பீகாரில் செயல்படுத்திய திட்டங்களை தமிழகத்திலும் கொண்டு வந்து, வலுவான கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ள பல திட்டங்களை கையில் எடுத்துள்ளது பாஜக டெல்லி தலைமை.  இதன் முதற்கட்டமாக தமிழகத்தில் தமக்கு ஆதரவாக உள்ள  பிளவுபட்டு கிடக்கும் முக்கிய கட்சிகளை ஒன்றிணைக்கவும் தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. தங்களுக்கு ஆதரவான, அனுசரனையான அதிமுக, பாமக என இரு பிரதான கட்சிகளிலும் உட்கட்சி பூசல் உச்சத்தில் உள்ளது. அதிமுகவில் உள்ள பிரச்சினைகளை முடிப்பதில்  இப்போது உடனே தீர்வு காண முடியாது. பாமகவில் தந்தை -மகன் மோதலால் கட்சியே இரண்டாக பிளவுபட்டு கிடக்கிறது. அதில் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என்பதில் முனைப்பு காட்ட ஆரம்பித்துள்ளது பாஜக தலைமை.

24

வடமாவட்டங்களின் முக்கிய வாக்கு வங்கியான வன்னியர் சமுதாய வாக்குகள் கொஞ்சம் சிதிறினாலும், அது திமுகவிற்கு சாதகமாகி விடும். ஆகையால் தந்தை, மகனான ராமதாஸ்- அன்புமணி விரிசலை அகற்றி பாமகவை ஒன்றிணைக்க வேண்டும். இது தந்தை- மகனுக்குள்ளான விவகாரம் என்பதால் இருவரையும் சமாதானம் செய்து வைப்பது எளிதான காரியம்தான். முதலில் இந்தப் பிரிவினையை சரி செய்து இருவரையும் உடனே ஒன்றிணைக்க வேண்டும். அதிமுக விவகாரத்தை அடுத்து பார்த்துக் கொள்ளலாம் என முடிவெடுத்துள்ளது பாஜக தலைமை. இந்நிலையில், பாஜக சார்பில் தேசிய அளவிலான தொழிலதிபர்கள் மூலமாக ராமதாஸ், அன்புமணி இருவரிடமும் பேசி அவர்களை இணைக்க முயற்சி எடுத்ததாகக் கூறப்படுகிறது.

34

இப்போது இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியே நேரடியாக தைலாபுரத்துக்குச் சென்று இருவரையும் சேர்த்து வைக்க முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விஷயத்தில் டாக்டர் ராமதாஸ் தரப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் சில யோசனைகளைக் கூறி அவரது தலைமையின் கீழ் கட்சி செயல்படுமாறு ஆலோசனைகளை மோடி வழங்குவார் என்றும் கூறப்படுகிறது. டாக்டர் ராமதாஸ் மீது எப்போதும் மோடி மிகுந்த மரியாதை வைத்திருக்கிறார். பிரதமர் மோடியின் விசுவாசியாகவும், பாஜக ஆதரவாளராகவும் அன்புமணி இருந்தாலும்கூட, வன்னியர்கள் ஓட்டுகள் சிதறக் கூடாது என்பதில் மிக கவனமாக இருக்க வேண்டும் என தமிழக விவகாரங்களை கையாளும் பாஜக நபர்கள் அமித்ஷாவிடம் எடுத்துக் கூறியதாகச் சொல்லப்படுகிறது.

44

இந்த முயற்சி இருவரையும் இணைத்து வைப்பது மட்டுமின்றி, இந்து மத கண்ணோட்டத்தில் அதிக ஈடுபாட்டுடன் இருக்கக்கூடிய வன்னியர்களை இயக்கக்கூடிய ஒரு சந்திப்பாக இருக்கும். அவர்கள் மத்தியில் ஒரு நற்பெயர் ஏற்படும் என்பதற்காகவும் மோடி தைலாபுரத்திற்கு சென்று சந்திக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. அமித்ஷா இந்த முயற்சியில் ஈடுபட்டாலும் ராமதாஸ் அசைய மாட்டார் என்றக் கருத்தும் சொல்லப்பட்டுகிறது. ஏனென்றால், ராமதாஸின் பழைய வரலாறு அப்படி. எப்படிப்பட்ட நபராக இருந்தாலும் ஆட்டிப் பார்த்து, அசைத்துப் பார்த்து கடைசி நிமிடம் வரை தனது வீட்டிற்கு வரவழைப்பதுதான் அவரது ஸ்டைல். ராமதாஸின் பிடிவாதம் என்பது அனைவரும் அறிந்த ஒரு விஷயம். இதை கருத்தில் கொண்டு, பாமக இணைப்பில் இனியும் தாமதிக்கக்கூடாது. தாமதித்தால் நட்டம் நமக்குத்தான் என்பதை உணர்ந்த பாஜக மற்றும் அதிமுக இந்த முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. தேர்தலுக்கு முன்பாக விரைவிலேய ராமதாஸ்- அன்புமணி- மோடி சந்திப்பு நடைபெறலாம் என்கின்றன பாஜக வட்டாரத் தகவல்கள். 

Read more Photos on
click me!

Recommended Stories