இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உயர் ரத்த அழுத்தம் அதிகமாக இருந்ததாகவும், இசிஜி-யில் மாறுபாடுகள் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. அதன்படி அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதில், ரத்த குழாயில் 3 அடைப்புகள் இருப்பதாக பரிசோதனை தெரியவந்துள்ளது.