பிரபல யூடியூபரும், அரசியல் விமர்சகருமான. சவுக்கு சங்கர் சவுக்கு மீடியா என்ற யூடியூப் சேனலை நடத்தி, அரசியல், ஊழல் தொடர்பான விஷயங்களை விவாதித்து வருகிறார். அவருடன் நெறியாளரான மாலதி பணியாற்றி வருகிறார். 2024 மே மாதம் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டபோது அவரது பினாமி சொத்துகள் குறித்த குற்றச்சாட்டுகள் வெளியானது. இதில் முக்கியமாக மாலதி பெயரில் வாங்கப்பட்ட வீடுகள் பற்றிய தகவல்கள் வைரலானது. இவை அனைத்தும் குற்றச்சாட்டுகளாகவே இருந்தாலும், ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டுள்ளன. சவுக்கு சங்கர் இவற்றை மறுத்துள்ளார்.
தி.நகரில் உள்ள வீடு 3.5 கோடி ரூபாய் வீடு, 2023 ஜூலை மாதம் மாலதி பெயரில் சவுக்கு சங்கர் 3 கோடி கொடுத்து வாங்கியதாக குற்றம்சாட்டப்பட்டது. 2 கோடி கருப்புப் பணமாக மறைத்ததாகவும் கூறப்பட்டது. பல்லாவரத்தில் 3 கோடிக்கு 2024 செப்டம்பர் 10 ம் தேதி மாலதி பெயரில் சவுக்கு சங்கர் வாங்கியதாக கூறப்படுகிறது. சவுக்கு சங்கரின் மனைவி நிலவு மொழி, “பெற்ற மகனுக்கு 2,000 ரூபாய் கொடுக்காதவன், மாலதிக்கு 1 கோடி வீடு வாங்கி கொடுத்தான்" என்று எக்ஸ்தளத்தில் பதிவிட்டார்.