ஆளுங்கட்சியை சேர்ந்த நகர்மன்றத் தலைவர் அதிமுகவில் இணைகிறார்? என்ன காரணம் தெரியுமா?

Published : Aug 24, 2023, 07:54 AM IST

திமுக தலைமை மீது அதிருப்தி ஏற்பட்டதை அடுத்து குமாரபாளையம் நகரமன்ற தலைவர் விஜய் கண்ணன் முன்னாள் அமைச்சர் தங்கமணி முன்னிலையில் அதிமுகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. 

PREV
13
ஆளுங்கட்சியை சேர்ந்த  நகர்மன்றத் தலைவர் அதிமுகவில் இணைகிறார்? என்ன காரணம் தெரியுமா?
Komarapalayam

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் திமுக நகர்மன்றத் தலைவராக விஜய் கண்ணன் இருந்து வருகிறார். இவர் குமாரபாளையம் நகரச் செயலாளர் பதவி அல்லது நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் பதவியை எதிர்பார்த்து காத்திருந்தார். ஆனால், இந்த இரண்டு பதவியும் வழங்காமல் சுற்றுச்சூழல் அணி தலைவர் பதவி வழங்கப்பட்டது.

23

இதனால் திமுக தலைமை மீது விஜய் கண்ணன் கடும் அதிருப்தியில் இருந்து வருவதாக தகவல் வெளியானது. இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி அவருடன் ரகசிய சந்திப்பு நடத்தியதாக கூறப்படுகிறது. அப்போது அதிமுகவிற்கு வந்தால் உரிய அங்கீகாரம் தரப்படும் என உறுதியளித்திருக்கிறார்.

33

இதனையடுத்து, விஜய் கண்ணன் தனது ஆதரவாளர்களுடன் அதிமுகவில் இணைய திட்டமிட்டார். இதை எப்படியே அறிந்து கொண்ட நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில் அவரை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ஆளுங்கட்சியை சேர்ந்த நகராட்சி தலைவர் அதிமுகவில் இணைய உள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Read more Photos on
click me!

Recommended Stories