வீணான உணவுகள்
இதற்காக அமைக்கப்பட்ட பந்தல்களில் தனித்தனி அண்டாக்களில் வெரைட்டி ரைஸ்கள் தயாரிக்கப்பட்டது. பிரிஞ்சி சாதம், சாம்பார் சாதம், புளியோதரை என வெரைட்டி வெரைட்டியாக உணவுகள் தயாரிக்கப்பட்டன. இதனையடுத்து அதிமுக மாநாடு காலை கொடியேற்றத்துடன் தொடங்கியதையடுத்து அதிமுக தொண்டர்களுக்கு உணவு விநியோகமமும் தொடங்கப்பட்டது. ஆனால் புளியோதரை உள்ளிட்ட உணவுகள் சரியாக வேகாமல் இருந்துள்ளது. இதனை தொண்டர்களால் சாப்பிட முடியாமல் கீழே கொட்டும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
இதனையடுத்து மாநாடு முடிந்து அடுத்த நாள் மாநாடு மேடை அமைந்திருந்த பகுதி முழுவதும் புளியோதரை உள்ளிட்ட உணவு பொருட்கள் மலை மலையாக குவிந்து கிடந்தது அங்கு வந்தவர்களை அதிர்ச்சி அடைய செய்தது. இதனையடுத்து அதிமுக மாநாட்டில் டன் கணக்கில் உணவு வீணானதாக செய்தி பரவியது.