A1. மதியழகன் – கரூர் மேற்கு மாவட்ட செயலாளர், A2. புஸ்ஸி ஆனந்த், A3. நிர்மல் குமார் மற்றும் பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவர்கள் மீது மேலும் BNS பிரிவு 105 – கொலைக்கு சமமல்லாத குற்றமற்ற கொலைக்கான தண்டனை.
BNS பிரிவு 110 – குற்றமற்ற கொலை செய்ய முயற்சி.
BNS பிரிவு 125 – மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அவசர/அலட்சிய செயல்களுக்கு தண்டனை .
BNS பிரிவு 223 – பொது அதிகாரியின் உத்தரவுக்குக் கீழ்ப்படியாமை குற்றமாக்கப்படுகிறது.
TNPPDL சட்டம் பிரிவு 3 – பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
BNS-ன் பிரிவு 105, 'கொலைக்கு சமமான குற்றமற்ற கொலை' குறித்த வழக்கு. இது கொல்லும் நோக்கத்துடன் அல்லது மரணம் நிகழக்கூடும் என்று தெரிந்தும் செய்யப்படும் செயல்களால் மரணம் ஏற்பட்டால் கடுமையான குற்றமாகும். இந்த வழக்கில், ஒரு பொது நிகழ்வின் போது கூட்டத்தை முறையாக நிர்வகிக்கத் தவறுவதும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தவறுவதும் இந்தப் பிரிவின் கீழ் அலட்சியத்தின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது.