கருணாநிதிக்கு அறிவாலயத்தைக் காப்பாற்றிக் கொடுத்ததே ஜெயலலிதாதான்..! கனிமொழிக்கு ப்ளாஷ்பேக் சொன்ன இபிஎஸ்

Published : Sep 23, 2025, 01:08 PM IST

இதேபோல திமுகவுக்கு சோதனை வந்தபோது, கட்சி அலுவலகத்தை பிரிந்து சென்றவர்கள் கைப்பற்ற நினைத்தபோது, அதைக் காப்பாற்றிக் கொடுத்த கட்சித் தலைவர் அம்மா என்பதை மறந்துவிடாதீர்கள்

PREV
14

‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பயணத்தில் ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையத்தில் பேசிய இபிஎஸ் ‘‘திமுக ஆட்சியில் எங்கு பார்த்தாலும் போதைப்பொருள் விற்பனை. கீழிருந்து மலைப் பகுதி வரை வந்துவிட்டது. போதைப் பொருள் இல்லாத இடமே கிடையாது. இதனால் இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி சீரழிகிறார்கள். இந்த நிலை மாற வேண்டுமானால் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வரவேண்டும். போதைப்பொருட்களை அதிகார மையத்தின் உதவியோடு திமுகவினரே செய்கிறார்கள் என்பது செய்தி.

24

திமுக ஆட்சியில் எல்லா துறையிலும் ஊழல். தமிழ்நாடு முழுவதும் 6 ஆயிரம் மதுக்கடை இருக்கிறது. டாஸ்மாக்கில் ஒரு நாளைக்கு ஒன்றரை கோடி பாட்டில் விற்கிறது. ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாகப் பெறுவதால் நாளொன்றுக்கு 15 கோடி ரூபாயும், மாதத்துக்கு 450 கோடி ரூபாயும், வருடத்துக்கு 5400 கோடியுமாக இந்த நான்காண்டுகளில் 22 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளை அடித்திருக்கிறார்கள். இதை துறை அமைச்சரே ஒப்புக்கொண்டார். மக்கள் சொல்வதை, மக்கள் எண்ணத்தையே நாங்கள் சொல்கிறோம். அமைச்சரே கூடுதலாக வாங்கியது உண்மைதான் என்றால், இந்த பணம் எங்கே போனது? எத்தனை பாட்டில் திரும்பப் பெற்றீர்கள், எவ்வளவு வசூலானது? இதுபற்றியெல்லாம் கணக்கே இல்லை.அதிமுக ஆட்சி மலர்ந்தவுடன் இதெல்லாம் தோண்டியெடுத்து நீதிமன்றம் மூலம் சட்டரீதியான தண்டனை பெற்றுக்கொடுப்போம்.

34

கனிமொழி பேசுகிறார். அதிமுக கட்சி அலுவலகம் டெல்லியில், உள்துறை அமைச்சர் அமித் ஷா வீட்டில் இருக்கிறது என்று பேசுகிறார். அந்தம்மா கனவு கண்டதா என்று தெரியவில்லை. திருமதி கனிமொழி அவர்களே, அதிமுக அலுவலகம் சென்னையில்தான் இருக்கிறது. வந்து பாருங்கள். நீங்களும் ஆள் வைத்து உடைத்துப் பார்த்தீர்கள். ஒன்றும் நடக்கவில்லை. ஏனென்றால் அதிமுகவை எம்ஜிஆர், அம்மா என்ற இரு தெய்வங்களும் அருள் புரிந்து காத்தருள்கிறார்கள்.

அதிமுகவை உடைக்க, பிளக்க சதி செய்தீர்கள். எந்த விதத்திலும் அதிமுக செயல்படக்கூடாது என்பதற்காக நீதிமன்றத்தின் மூலமாக வெவ்வேறு விதத்தில் முயற்சி செய்தீர்கள். அத்தனையும் அதிமுக தொண்டர்களால் முறியடிக்கப்பட்டது. இது தொண்டர்கள் நிறைந்த கட்சி, உழைப்பால் உயர்ந்த கட்சி, ஸ்டாலின் அவர்களே நீங்கள் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதிமுகவை அசைக்கவோ ஆட்டவோ முடியாது. அதிமுகவை அழிக்க எத்தனையோ பேரை கொம்பு சீவிக்கொண்டிருக்கிறீர்கள். எத்தனையோ வழியில் சோதனையை ஏற்படுத்துகிறீர்கள். அத்தனை சோதனையும் தூள் தூளாக்கப்படுகிறது.

44

இதேபோல திமுகவுக்கு சோதனை வந்தபோது, கட்சி அலுவலகத்தை பிரிந்து சென்றவர்கள் கைப்பற்ற நினைத்தபோது, அதைக் காப்பாற்றிக் கொடுத்த கட்சித் தலைவர் அம்மா என்பதை மறந்துவிடாதீர்கள். திமுக ரெண்டாகப் போனது கருணாநிதி தடுமாறிக் கொண்டிருந்தார், அப்போது சிலர் அறிவாலயத்தை கைப்பற்ற நினைத்தபோது காப்பாற்றிக்கொடுத்தது அதிமுக. எப்போதும் அதிமுகவுக்கு மற்றவர்களுக்கு உதவி செய்துதான் பழக்கம். ஆனால் திமுக மக்களுக்கும் உதவிசெய்தது கிடையாது, கூட்டணி கட்சிக்கும் உதவி செய்த வரலாறு கிடையாது’’ எனத் தெரிவித்தார்.

Read more Photos on
click me!

Recommended Stories