ப்ளானை மாற்றிய திமுக-அதிமுக..! இந்தத் தொகுதியில்தான் போட்டியிடுகிறாரா விஜய்..?

Published : Sep 22, 2025, 09:04 PM IST

234 தொகுதிக்கான பல்ஸ் பார்க்க விஜய் ஒரு புறம் சுற்றுப்பயணம் கிளம்பி இருக்கிறார். இன்னொரு புறம் தனக்கான தொகுதி தேர்வை சத்தமில்லாமல் கவனிக்கவும் தொடங்கி இருக்கிறார்.

PREV
13

தவெகவின் எழுச்சியால், திமுக, அதிமுக கட்சிகள் தங்களது ப்ளானை மாற்றி வருகின்றன. ஆகையால் விஜய் போட்டியிடும் தொகுதி தேர்வு எதிர்பார்ப்பை கிளப்பி இருக்கிறது.

234 தொகுதிக்கான பல்ஸ் பார்க்க விஜய் ஒரு புறம்  சுற்றுப்பயணம் கிளம்பி இருக்கிறார். இன்னொரு புறம் தனக்கான தொகுதி தேர்வை சத்தமில்லாமல் கவனிக்கவும் தொடங்கி இருக்கிறார். அதாவது 234 தொகுதிகளையும் சுற்றி வரும் வகையில் இந்த பயணத்தை அமைத்திருக்கிறார். மிக முக்கியமாக விஜய் தனக்கான தொகுதி தேர்வில் கடல் சார்ந்த தொகுதிகளாக இருக்க வேண்டும் என நினைக்கிறார். அதில் முக்கிய லிஸ்டில் இருக்கக் கூடிய நாகப்பட்டினம், சென்னையில் திருவொற்றியூர், தெற்கே தூத்துக்குடி என கடல் சார்ந்த தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறார் விஜய்.

23

அடுத்து உழைக்கும் மக்கள் அதிகமாக இருக்கக்கூடிய, வட மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்துகிறார், பட்டியல் சமூகத்தினர், இன்னொரு பக்கம் வன்னியர் சமூகத்தினர், அடர்த்தியாக உழைக்கும் மக்கள் இருக்கக்கூடிய தொகுதிகள், சிறுபான்மையினர் முக்கியமாக இருக்க வேண்டும் என பல விஷயங்களை கணக்கிட்டு வருகிறார்கள். இந்த வகையில் விஜய் தனக்கு தோதான வாய்ப்பு இருக்கிற மாதிரி ஒரு பத்து தொகுதிகளை தொடக்கத்தில் இருந்தே லிஸ்ட் போட்டு வைத்திருக்கிறார்.

விஜய் அப்போதே நம்முடைய தொப்புள் கொடி உறவுகள், தமிழர்களுக்கு ஆதரவாக இங்கு நான் நாகப்பட்டினம் வந்து இருகிறேன். இங்கே மக்களுக்காக பேசி இருக்கிறேன் என அதையும் தொட்டு பேசினார். அவருடைய இந்த பயணத்தில் தன்னை தமிழ்நாட்டுக்கான அடையாளப்படுத்துதல், இன்னொரு பக்கம் மீனவன் நண்பன், சிறுபான்மையினர், அனைத்து சமுதாயத்தினருடைய நலன், மதச்சார்பின்மை என பல்வேறு விஷயங்களை முன்னிறுத்தி தனது பரப்புரை பயணத்தை முன்வைத்து இருக்கிறார்.

33

நாகபட்டினத்தில் விஜயின் வருகைக்கு முன்னால் எப்படி மக்கள் இருந்தார்கள். விஜயின் வருகைக்கு பிறகு அந்த தொகுதியில் அந்த மாவட்டத்து மக்கள் எப்படி பார்க்கிறார்கள். ஆதரவு அதிகரித்து இருக்கிறதா? அல்லது ஆதரவு குறைந்து இருக்கிறதா? சாதக, பாதக கணக்குகள் என தனியாக அந்தந்த மாவட்ட கழக நிர்வாகிகளிடம் கேட்கத் தொடங்கி இருக்கிறார்கள். அந்த வேலைகளிலும் தீவிரமாக இறங்கி இருக்கிறார்கள். அடுத்து இரண்டாம் கட்டமாக சுற்றுப்பயணம் வரும்போது தவறுகள் இருந்தால் அதை சரிப்படுத்திக் கொள்ள இது ஒரு வாய்ப்பாக இருக்கும் என கருதுகிறார் விஜய் என்கிறார்கள் தவெக நிர்வாகிகள்.

Read more Photos on
click me!

Recommended Stories