அதுபோலவே நாங்களும் செயல்படுகிறோம். எனவே, அவர் எங்களுடன் வந்து நிற்க வேண்டிய நேரம் இதுதான். எதிர்காலத்தில் திமுக விஜய்க்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவியை வழங்க வேண்டிய சூழ்நிலை உருவாகலாம். அவர் திமுகவுடன் இணைந்து செயல்படக்கூடும். அவரை இப்போது அவசரமாக பேசிவிட்டு பிறகு பருத்தி வீட்ரன் படத்தில் வருவது போல ‘‘அடுத்த மாசம் சாப்பிட வரும்போது, இலையை பார்த்தா குழம்பு ஊத்துறது? முகத்தைப் பார்த்து சிரிக்க வேண்டாமா?’’ என்கிற கதையாகி விடக்கூடாது ‘’ என அவர் தெரிவித்தார்.
கரு.பழனியப்பனின் பேச்சு கமலஹாசன் தரப்பை மறைமுகமாக சாடுவது போல் அமைந்துள்ளடு. 2018ல் தனது கட்சியைத் தொடங்கியபோது, திமுக, அதிமுக போன்ற பெரிய கட்சிகளை ‘ஊழல் கட்சிகள்’ என்று கடுமையாக விமர்சித்தார். ஆனால், 2021 சட்டமன்றத் தேர்தலில் தனித்து நின்று தோல்வியடைந்த பின், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியுடன் சேர்ந்து செயல்பட்டார். திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். கமலின் இந்த மாற்றம் தமிழக அரசியல் வட்டங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியது.