இன்றைக்கு இவ்வளவு ஆர்வமாக தர்காகாரர்கள் செய்கிற வேலையை எல்லாம் கோவிலுடைய ஒருங்கிணைப்பு அதிகாரி செய்கிறார். ஆனால் அன்றைக்கு நெல்லித்தோப்பில் போய் ஆடு வெட்டலாம், கோழி வெட்டலாம் என சொன்னபோது இந்த கண்டுகொள்ளவில்லை. தமிழ்நாடு அரசு எதிர்ப்புத்தெரிவிக்கவில்லை. சிக்கந்தர் மலை என்று பெயர் சொன்னார்கள். ஏன் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அந்த எம்.பி., 100 பேரை கூட்டி போய் சிக்கல் பிரியாணி சாப்பிடுகிறார், அதை ஏன் எதிர்க்கவில்லை. அன்றைக்கு எங்கேயுமே எதிர்ப்பு தெரிவிக்காதவர்கள் இன்று அந்த நீதிபதி தீர்ப்பில் அதையும் குறிப்பிட்டு இருக்கிறார். திமுக அரசு அதை நிராகரிக்கவில்லை.
இன்று இந்து பக்தர்கள் வழக்கு தொடர்ந்ததால் தீர்ப்பு கிடைத்திருக்கிறது. அப்படி இருக்கும்போது ஒருதலைப் பட்சமாக தமிழகத்தில் இந்து மதத்தை நம்பக்கூடிய பக்தர்களுக்கு எதிராக மிக முக்கியமாக மோசமான அரசியலை திமுக செய்கிறது. என் கையில் இருக்கக்கூடிய லிஸ்டில் தமிழகத்தில் எங்கே எல்லாம் இந்து கோவில்களை இடித்தார்கள், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு எங்கெல்லாம் இந்து கோயில்களை இடித்தார்கள், கோவையில், முத்தாலம்மன் கோயில், சென்னை, மின்ட் ரோட்டில் வீர விநாயகர் கோவில், தஞ்சாவூர் குபேர விநாயகர் கோவில், கீழவாசல் ஆதி மாரியம்மன் கோவில், அரியலூர் மாவட்டம், சனீஸ்வர பகவான் கோயில் என 161 கோயில்கள் என லிஸ்ட்டை தாண்டும்.