2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன், போலி வாக்காளர்கள், இறந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்களின் பெயர்களை நீக்குவதற்காக இந்தப் பணி மேற்கொள்ளப்படுகிறது. இந்தப் பணி தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடைபெறுகிறது. நவம்பர் 29, 2025 வரையில் 58.9 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் 97.25 சதவிகிதம் எஸ்.ஐ.ஆர் கணக்கீட்டு படிவங்கள் பதிவேற்றப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கணக்கெடுப்பு முழுமையானால், இது 50 லட்சத்திற்கும் மேல் இந்த எண்ணிக்கை உயரலாம். இதில்,இறந்தவர்கள்: 23.83 லட்சம் பேர். இடம்பெயர்ந்தவர்கள் 27.10 லட்சம் பேர். கண்டுபிடிக்கப்படாதவர்கள் 5.19 லட்சம் பேர் இடம்பெறலாம்.