ஆடு வெட்டி புது சடங்கு உருவாக்கினது தான் பிரச்சனைக்கு காரணமே..! திருப்பரங்குன்றம் பின்னணியின் உண்மை உடைக்கும் திமுக எம்.பி தங்க தமிழ்ச்செல்வன்..!

Published : Dec 05, 2025, 01:21 PM IST

திமுகவினர் பலரும் எதிர்ப்பட்ட கருத்துக்களை கூறி வரும் நிலையில் தங்க தமிழ்செல்வனின் கருத்து அதிலிருந்து மாறுபட்டு இருப்பதால் பெரும் விவாதத்தைக் கிளப்பி உள்ளது.

PREV
13

திருப்பரங்குன்றம் தீப ஏற்றல் விவகாரத்தில் திமுக எம்.பி தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ள கருத்து சமூக ஊடகங்களில் பரவலாக விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் "திருப்பரங்குன்றம் பிரச்சனைக்கு முழு முதல் காரணம் அங்குள்ள இஸ்லாமிய மக்கள்" என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர், ‘‘திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள பிரமலைக்கள்ளர்களுக்கோ, அங்கே இருக்கிற இஸ்லாமியர்களுக்கோ எந்த கருத்து வேறுபாடும் இல்லை. இப்ப புதுசா நான் போய் கெடா வெட்டுவேன், பிரியாணி கொடுப்பேன், ரத்தப்பலி காண்பிப்பேன் என்று சொல்லும்போதுதான் பிரச்சினை உருவாகிறது. இது தேவையில்லாத விஷயம். அங்க இருக்கிற கண்ணியத்திற்குரிய இஸ்லாமிய பெரு மக்களும், நாங்களுமே இன்னை வரைக்கும் ஒண்ணா வாழ்ந்துட்டு இருந்துட்டு இருக்கிறோம். எங்களுக்குள்ள எந்த பிரிவினையும், சண்டை சச்சரவுகளும் இல்லை.

23

தேவையில்லாமல் இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ், இங்கிட்டு இஸ்லாமிய பெருமக்கள் ஒரு விவாதத்தை தொடங்குவது மாபெரும் தவறு என்பதை நான் முதல் குற்றச்சாட்டாக வைக்கிறேன். இஸ்லாமிய பெருமக்கள் அங்கே போய் ரத்ததானம் கொடுத்து, கிடா வெட்டுவதாக சொன்னதே தப்பு. அது அங்கே பழக்கத்தில் இல்லை. சொன்னதே தப்பு. அங்கே பலங்காலமாக கோழி பலியிடுவது இயல்பாக நடக்கும். ஆனால்,அடையே சடங்காக நடத்த வேண்டும் தினமும் செய்ய வேண்டும் என நினைத்து செல்வது தப்பு. என்றைக்கோ ஒரு நாளைக்கு பண்ணுவாங்க. பொதுவா கண்ணியத்திற்குரிய இஸ்லாமிய பெருமக்கள் என்ன சொல்வார்கள் என்றால் அல்லா தான் கடவுள்.நபிகள் நாயகம் இருவழிதூதார்.இப்படி இருக்கும்போது ஒரு சமாதியை வணங்க மாட்டார்கள். இப்படி இருக்கும்போது புதிதாக ஒரு சடங்கை கொண்டு வரவேண்டும், வழக்கத்தை கொண்டு வர வேண்டும் எனத் திணிக்கிறார்கள் அல்லவா? அதைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம்’’ எனத் தெரிவித்துள்ளார்.

33

திமுகவினர் பலரும் எதிர்ப்பட்ட கருத்துக்களை கூறி வரும் நிலையில் தங்க தமிழ்செல்வனின் கருத்து அதிலிருந்து மாறுபட்டு இருப்பதால் பெரும் விவாதத்தைக் கிளப்பி உள்ளது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் சுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ள மலை உச்சியின் இடதுபுறத்தில் காசி விஸ்வநாதர் ஆலயமும் மறுபுறம் சுல்தான் பாதுஷா சிக்கந்தர் அவுலியா தர்காவும் அமைந்துள்ளன. ஒவ்வோர் ஆண்டும் கார்த்திகை தீப நாளில் சுப்ரமணிய சுவாமி கோவிலில் உள்ள பிள்ளையார் கோவில் தீப மண்டபத்தில் தீபம் ஏற்றுவது வழக்கமாக இருந்தது. இந்நிலையில், மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கையை இந்து அமைப்பினர் முன்வைத்துள்ளனர்.

Read more Photos on
click me!

Recommended Stories