செங்கோட்டையனை நீக்கவும் முடியாது.. பிரிந்தவர்களை சேர்க்கவும் முடியாது..! சிக்கி சின்னாபின்னமாகும் எடப்பாடி..!

Published : Sep 06, 2025, 11:33 AM IST

செங்கோட்டையனின் கெடுவை ஏற்க முடியாமலும், அவரை நீக்க முடியாமலும் திக்கித்திணறி வருகிறார் எடப்பாடி பழனிசாமி. அதிமுகவில் ஏற்பட்டுள்ள இந்த மோதல் வரும் தேர்தலில் திமுகவின் வெற்றியை எளிதாகவும், விஜய் தன் கட்சியை வலுப்படுத்தவும் தக்க தருணமாக மாறி வருகிறது.

PREV
14

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருந்த கட்சியின் மூத்த நிர்வாகி செங்கோட்டையன், நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர், பிரிந்து சென்றவர்களை 10 நாள்களுக்குள் மீண்டும் இணைப்பது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும். பிரிந்தவர்களை இணைக்காவிட்டால் இபிஎஸ்ஸின் பிரசாரத்தில் பங்கேற்கப் போவதில்லை என்றும் ஒரே மனப்பான்மையில் இருப்பவர்கள் ஒன்றிணைவோம் என்றும் அவர் தெரிவித்தார். செங்கோட்டையனின் கருத்துக்கு, ஓ. பன்னீர்செல்வம், சசிகலா, பாஜக தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்தனர்.

24

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி, அதிமுக மூத்த நிர்வாகிகளுடன் திண்டுக்கல்லில் இன்று காலை முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்த ஆலோசனையில், அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கே.பி. முனுசாமி, பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.

அதிமுகவில் இருந்து பிரிந்திருந்தவர்களை ஒருங்கிணைக்க இபிஎஸ்-க்கு செங்கோட்டையன் 10 நாட்கள் கெடு விதித்திருந்த நிலையில் இந்த ஆலோசனை நடைபெற்று வருகிறது. பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சிக்குள் இணைக்க வேண்டும் என்ற செங்கோட்டையனின் நிபந்தனையை ஏற்க எடப்பாடி பழனிசாமி மறுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. செங்கோட்டையன் ஊர்வலமாக சென்று பொதுவெளியில் பேசியதால் நடவடிக்கை என்றும், முதற்கட்டமாக அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

34

அதே நேரத்தில் எடப்பாடியாருக்கு கெடு விதித்த செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்க எடப்பாடி பழனிசாமி தயக்கம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது. காரணம், அவரை நீக்குவதை பாஜக விரும்பாது. அமித் ஷா விரும்புவதும் ஒருங்கினைந்த அதிமுகவைதான். ஒருங்கிணைந்த அதிமுகவை அக்கட்சியில் இருக்கும் தொண்டர்களும் விரும்புகிறார்கள். ஒருவேளை செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்கினால், அது எடப்பாடி பழனிசாமிக்கு கட்சியில் பின்னடைவை ஏற்படுத்தும். செங்கோட்டையனுக்கு பாஜகவின் ஆதரவும் இருக்கிறது. ஆகையால் செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்க எடப்பாடி தயக்கம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமி, கட்சியின் பொதுச்செயலாளராக இருந்தாலும், செங்கோட்டையனின் இந்தக் கோரிக்கையை ஏற்க வாய்ப்பில்லை என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். காரணம், பிரிந்தவர்களை இணைத்தால், எடப்பாடியின் பதவிக்கு அச்சுறுத்தலாக அமையலாம் என அவர்கள் அஞ்சுகின்றனர். செங்கோட்டையன் பொது மேடைகளில் எடப்பாடியின் பெயரை உச்சரிப்பதைத் தவிர்ப்பது, அவர்களுக்கிடையே உள்ள மோதலின் உச்சத்தை வெளிப்படுத்துகிறது.

44

செங்கோட்டையனின் செல்வாக்கு ஈரோடு, தென் மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க அளவில் இருந்தாலும், அவரால் கட்சியில் பெரிய பாதிப்பை ஏற்படுத்த முடியாது என சிலர் கருதுகின்றனர். ஆனாலும், தேர்தலில் தோல்வி ஏற்பட்டால், எடப்பாடிக்கு எதிரான குரல்கள் வலுப்பெறலாம்.

இந்த மோதல், அ.தி.மு.க.வின் உட்கட்சி டைனமிக்ஸையும், எடப்பாடியின் தலைமைக்கு எதிரான அதிருப்தியையும் வெளிப்படுத்துகிறது. செங்கோட்டையனின் கெடு நிறைவேறாவிட்டால், கட்சியில் மேலும் பிளவுகள் ஏற்படலாம். எனவே, செங்கோட்டையனின் நிலைப்பாடு எடப்பாடிக்கு அழுத்தத்தை அதிகரித்து இருக்கிறது. செங்கோட்டையனின் கெடுவை ஏற்க முடியாமலும், அவரை நீக்க முடியாமலும் திக்கித்திணறி வருகிறார் எடப்பாடி பழனிசாமி. அதிமுகவில் ஏற்பட்டுள்ள இந்த மோதல் வரும் தேர்தலில் திமுகவின் வெற்றியை எளிதாகவும், விஜய் தன் கட்சியை வலுப்படுத்தவும் தக்க தருணமாக மாறி வருகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories