ஒருங்கிணைந்த அதிமுகவை நாங்கள் உருவாக்க முனைந்தோம். எடப்பாடியார் ஒப்புக்கொள்ளவில்லை. அதனால் தொண்டர்களின் விருப்பப்படி, பிரிந்தவர்களை ஒருங்கிணைத்து புதிய அணியை உருவாக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டோம் என்று கூற, ஒரு வாய்ப்பை இந்த பத்திரிகையாளர் சந்திப்பு வாயிலாக உருவாக்கி இருக்கிறார் செங்கோட்டையன். விரைவில் அதிமுக அணிக்குள் சலசலப்பு ஏற்படும். முக்கிய நிர்வாகிகளுடன் போட்டி அதிமுக உருவாகும். அதிமுகவுக்குள் எஞ்சியிருக்கும் ஓபிஎஸ், சசிகலா, டிடிவி ஆட்கள், இதை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். செங்கோட்டையன் அன்வர்ராஜா, மைத்ரேயன், போன்ற இன்னும் எத்தனை பேர் எடப்பாட்டியாருக்கு எதிரான மனநிலையில் இருக்கிறார்கள் என்பது இனி தெரியுவரும்.
அதிமுக ரத்தத்தின் ரத்தங்களை பொறுத்தவரை உடைந்த அதிமுக ஒன்று சேரவேண்டும் என்றுதான் துடிக்கிறார்கள். அரசியல் களத்தில் அதிமுக பலமிழந்து நிற்பதை அவர்கள் விரும்பவில்லை. இந்நிலையில், சசிகலாவோ, செங்கோட்டையன் கருத்தை வரவேற்று, அவருக்கு அதிமுக ரத்தம் ஓடுகிறது என்று குறிப்பிட்டுள்ளார். முன்னாள் எம்.எல்.ஏ வைதியநாதன் அதிமுக தொண்டர்கள் அவர் பின்னால் இருப்பதாக கூறியுள்ளார்.