ஒதுங்கிப்போ..! எடப்பாடியாரால் அது முடியாது..! நான் மட்டும்தான் செய்ய முடியும்..! சசிகலா அதிரடிச் சவால்..

Published : Aug 18, 2025, 04:07 PM IST

எனக்கு வேலை தெரியும். அதனால் எவ்வளவு கஷ்டப்பட்டாவது நாங்கள் நிமிர்த்தி கொண்டு வருவோம். அந்த திறமை எங்களுக்கு இருக்கிறது, அந்த அறிவு இருக்கிறது. அதை வெற்றிகரமாக செய்வோம்.

PREV
14

‘‘திமுக விளம்பர ஆட்சி நடத்தி வருகிறது. தமிழ்நாட்டில் மீண்டும் திமுக-வை ஆட்சிக்கு வர விட மாட்டேன் ’’ என சவால் விடுத்துள்ளார் சசிகலா.

அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் கட்சியிலிருந்து விலகி திமுகவில் சேர்ந்து வருகிறார்கள். அன்வர் ராஜா, மைத்ரேயன் ஆகியோர் சமீபத்தில் திமுகவில் சேர்ந்துள்ளது அதிமுகவிற்கு பலவீனமாக பார்க்கப்படுகிறது. இதுகுறித்து பேசிய சசிகலா, ‘‘ இப்போ வரைக்கும் சொல்லப் போனீர்கள் என்றால் அப்படித்தான் இருக்கிறது. அதை மாற்றுவதுதான் என்னுடைய வேலை. இதை புதிதாக ஒருத்தர் கற்றுக் கொண்டு எல்லாம் செய்ய முடியாது. இங்கே நிறைய சிக்கல்கள் இருக்கிறது. பாருங்கள். இதை யாராவது ரொம்ப அனுபவப்பட்டவர்களால் மட்டும்தான் இந்த சிக்கலை பிரிக்க முடியும். அதுதான் உண்மை.

24

அம்மா போய் ரோட்டில் இன்று ரோஷோ காட்டி, கையைப் பிடித்துக் கொண்டே செல்வதே இல்லை. அது இல்லை முதல்வரின் வேலை. நீங்கள் நிர்வாகத்தை பார்க்க வேண்டும். நிர்வாகத்தை பார்க்காமல் நீங்கள் ரோடு ஷோ காட்டினால் எப்படி? யார் போனாலும் கையைக் கொடுப்பார்கள். அதேபோல அரசியல் சிலர் நினைத்துக் கொண்டிருப்பது போல் இல்லை. அரசியலுக்கு நாம் வந்து விட்டோம் என்றால் எல்லாத்தையும் செய்து விடலாம் என்று நினைக்கிறார்கள். அரசியல் வேற. இதை சரியாக செய்பவர்கள் இருந்தால்தான் அந்தந்த வேலை சரியாக நடக்கும்.

அம்மாவின் ஆட்சியை ஆட்சி நிச்சயம் கொண்டு வருவோம். இந்த மக்களுக்கு நான் சொல்லிக் கொண்டிருப்பதை நிச்சயம் நான் செய்கிற ஆள். இல்லையென்றால் நான் சொல்ல மாட்டேன். ஏனென்றால் எனக்கு வேலை தெரியும். அதனால் எவ்வளவு கஷ்டப்பட்டாவது நாங்கள் நிமிர்த்தி கொண்டு வருவோம். அந்த திறமை எங்களுக்கு இருக்கிறது, அந்த அறிவு இருக்கிறது. அதை வெற்றிகரமாக செய்வோம். ஆனால், திமுகவால் செய்யமுடியவில்லை என்பதை இந்த நான்கரை வருடங்களில் அவர்கள் காண்பித்து விட்டார்கள். பாருங்கள், முக்கால்வாசி குப்பைகளைப் போடுவதே திமுகவினர்தான். இவர்களாலே குப்பை அதிகமாக சேர்கிறது. எங்கே பார்த்தாலும் இவர்கள் சம்பந்தப்பட்ட ஆட்கள் தான் ஃபுட் கோர்ட் என்கிற கலாச்சாரத்தை வைத்திருக்கிறார்கள். நகரம் முழுவதும் வைத்திருக்கிறார்கள்.

34

கத்திப்பாராவில் உள்ளே சென்று பாருங்கள். நீலாங்கரை செல்லும் வழியெல்லாம் பாருங்கள். அங்கே கழிவுகள் நிறைய சேர்கிறது. ஆனால், தள்ளுவண்டி வைத்திருக்கும் ஒரு ஆளை பார்க்க முடியவில்லை. காரணம், எல்லோரையும் அடித்து விரட்டுகிறார்கள்’’ என்றார்

‘‘அனுபவம் இருப்பவர்கள்தான் அதிமுகவில் தற்போதைய சிக்கலை தீர்க்க முடியும் என்று சொன்னீர்கள். உங்கள் அனுபவத்தை அவர்கள் பயன்படுத்தி கொள்ள தயாராக இருக்கிறார்கள் என நினைக்கிறீர்களா ? இப்போது இருக்கிற தலைமை வேறு யாருக்கும் இடமில்லை என்று தொடர்ச்சியாக சொல்லி வருகிறார்கள். நீங்கள் இல்லாமலே 2019, 2021, 2024 தேர்தலை சந்தித்து விட்டார்கள். 2026 தேர்தலுக்கும் ஆயத்தமாகி கொண்டு வருகிறார்கள். நீங்கள் எப்படி இதில் செயல்பட போகிறீர்கள்? என்ற கேள்விக்கு, ‘‘ நான்தான் பண்ணுவேன் என்று சொல்கிறேனே. நிச்சயம் செய்வேன். நான் செயலில் இறங்கிய பிறகு ரிசல்ட்டை பாருங்கள். சி.பி.ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதியாக போட்டியிடுவது தமிழ்நாட்டுக்கு பெருமை தான். ரொம்ப நல்ல மனிதர். இரண்டு முறை மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டவர். இது தமிழ்நாட்டு மக்களுக்கு பெரிய சந்தோஷமான விஷயம்’’ என்றார்.

44

ஓ.பன்னீர்செல்வம் உங்களை சந்தித்ததாக கடந்த மாதம் தெரிவித்து இருந்தார் அப்போது என்ன பேசினீர்கள் ? என்ற கேள்விக்கு ‘‘அதை போய் உங்களிடம் சொல்ல முடியுமா? அவர் என்னை சந்தித்ததாக உண்மையில்லாமல் சொல்ல மாட்டார்’’ எனத் தெரிவித்தார் சசிகலா.

click me!

Recommended Stories