இந்நிலையில், கரூர் சம்பவத்துக்கு ஆறுதல் சொல்லும் விதமாக விஜயிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியுள்ளது தமிழகத்தில் என்.டி.ஏ கூட்டணியில் விஜயும் இணையலாம்' என்று கூறப்படுகிறது.
விஜயுடனான தனது பேச்சில் அதை உணர்த்திய அமித் ஷா, 'கரூர் சம்பவத்துக்குப் பின், உங்களுக்கு அச்சுறுத்தல் கூடுதலாகி உள்ளது. அதனால், ஏற்கனவே வழங்கும் மத்திய அரசு பாதுகாப்பை பலப்படுத்த திட்டமிட்டுள்ளோம்' என்று தெரிவித்துள்ளார்.
கரூர் சம்பவத்தில், திமுகவை முழுமையாக குற்றம் சாட்டுவதால், அக்கட்சியினர் விஜய் மீது கோபத்தில் இருப்பபார்கள். அதனால், தவெக தரப்பில் அடுத்தடுத்து நடக்கக்கூடிய பிரசார கூட்டங்களில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்' என்றும் விஜயிடம் எச்சரித்துள்ளார் அமித் ஷா. இதன்தொடர்ச்சியாக தற்போது விஜய்க்கு மத்திய அரசு வழங்கி வரும் சிஆர்பிஎப் பாதுகாப்பை இரண்டு மடங்காக்கும் வேலைகளை மத்திய உள்துறை அமைச்சகம் துவக்கி இருக்கிறது.
நெருக்கடியான சூழலில் ஆதரவாக இருப்பதன் மூலம் தவெக தலைவர்களும், தொண்டர்களும் அதிமுக - பாஜக - தவெக கூட்டணிக்கு தலைமையை வலியுறுத்துவார்கள் என திட்டமிட்டே அதற்கேற்ப காய்களை நகர்த்துகிறார் அமித் ஷா எனக் கூறப்படுகிறது. ஒருவேளை எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுப்பது போல கரூரில் 41 பேர் பலியான சம்பவத்தின் விசாரணை சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டால், சிபிஐ அதிகாரிகளை வைத்து திமுகவினருக்கு நெருக்கடி கொடுக்கும் வேலைகளையும் செய்ய அமித் ஷா தரப்பு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.