விஜயை சிறையில் அடைத்தால் அவர்தான் அடுத்த முதல்வர்..! அடித்துச் சொல்லும் பிரபல டாக்டர் ..!

Published : Oct 04, 2025, 03:50 PM IST

விஜய்க்கு உள்ள பாப்புலாரிட்டிக்கு அவரை கைது செய்தார்கள் என்றால் அதன் தாக்கம் பெரிய சுனாமி அலையாக மாறும். தமிழ் நாடு பற்றிக் கொள்ளும். ஆளும் கட்சியான திமுகவை அடித்து விட்டு போய் விடும்’’ என்கிறார் பிரபல டாக்டர் லைஃப் லைன் ராஜ்குமார்.

PREV
14

செப்டம்பர் 27 அன்று கரூரில் நடந்த தவெக தலைவர் விஜயின் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் பலியானதைத் தொடர்ந்து, அவருக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. தமிழகம் முழுவதும் விஜயை கைது செய்யக்கோரி போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. கரூரில் பாதிக்கப்பட்டவர்களை கண்டு கொள்ளாமல் தவெக நிர்வாகிகளும், இரண்டாம் கட்டத் தலைவர்களும் சென்றது கடும் விவாதங்களைக் கிளப்பியது. இந்நிலையில் தாமதமாகவே வீடியோ வெளியிட்டு வருத்தம் தெரிவித்து, இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் நிதி உதவியை அறிவித்தார் விஜய். இது அரசியல் சதி என்று கூறி, சிபிஐ விசாரணைக்கு கோரிக்கை விடுத்தார். ‘‘ என்னைச் சார்ந்தவர்களை விட்டு விடுங்கள். நான் அலுவலகத்தில் அல்லது வீட்டில் தான் இருப்பேன். சிஎம் சார் என்னை என்ன வேண்டுமானலும் செய்து கொள்ளுங்கள்’’ எனத் தெரிவித்தார் விஜய். இது ஸ்டாலினுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகவே பார்க்கின்றனர் திமுகவினர்.

24

காவல்துறையினரில் எஃப்.ஐ.ஆரில் விஜய் பெயரை நேரடியாக பெயர் குறிப்பிடப்படவில்லை. ஆனால் தவெகவின் 3 முக்கிய நிர்வாகிகளான கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன், மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மாநில இணைச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் செப்டம்பர் 29 அன்று கைது செய்யப்பட்டார். அவர் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். புஸ்ஸி ஆனந்தை போலீஸார் தேடி வருகின்றனர். ஆதவ் அர்ஜூனா மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கூட்ட நெரிசல் தொடர்பாக திமுக அரசுக்கு எதிராக வதந்திகளைப் பரப்பியதாக பலரும் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வருகின்றனர். கரூரில் "விஜய்யை கைது செய்யுங்கள்" என போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. விஜயை கைது செய்ய திமுக அரசு அஞ்சுவதாக பலரும் கூறி வருகின்றனர். திமுக கூட்டணியில் உள்ள விசிக தலைவர் திருமாவளவன், ‘‘விஜய் மீது வழக்குப் பதிவு செய்யாதது "அரசியல் காரணங்களால்தான். திமுக- தவெக இடையே ரகசிய ஒப்பந்தம் இருக்கலாம்’’ என்று சந்தேகம் கிளப்பினார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோரும் கேள்வி எழுப்பியிருந்தனர். நீதிமன்றமும் விஜய் மீது நடவடிக்கை எடுக்காத்து ஏன் என விளக்கம் கேட்டிருந்தது.

34

ஒரு மனுதாரர் ஒருவர், விஜயை வழக்கில் சேர்க்கக் கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். முதல்வர் மு.க. ஸ்டாலின் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜகதீசன் தலைமையில் ஆணையத்தை அமைத்து விசாரணை செய்ய உத்தரவிட்டுள்ளார். விஜய் இப்போதுவரை கைது செய்யப்படவில்லை. ஆனால் விசாரணை தொடர்கிறது. இந்த நிலையில் மூத்த அமைச்சரும், திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகனிடம், தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள வீடியோவில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு சவால் விடும்படி பேசியுள்ளது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்தவர், ‘‘ விஜய் தனது கட்சி தொண்டர்களுக்காக பேசியுள்ளார். விஜய்யை கைது செய்யும் சூழல் வந்தால் கைது செய்வோம். தேவையில்லாமல் யாரையும் கைது செய்ய மாட்டோம்’’ என துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

44

உயர்நீதிமன்றம் தீர்ப்பின் மூலமோ அல்லது ஆணைய அறிக்கை வந்தாலோ கைது செய்யப்படலாம். இது அரசியல் ரீதியாக பெரிய பாதிப்பை ஏற்படுத்தலாம். ஏனென்றால் கரூர் சம்பவத்திற்கு பிறகு விஜயின் பாப்புலாரிட்டி அதிகரித்து உள்ளது.

விஜயின் கைது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள பிரபல மருத்துவர் ராஜ் குமார், ‘‘அவரை சிறையில் அடைத்தார்கள் என்றால் அவர் தான் அடுத்த முதல்வர். அவர் அல்லது அவருக்கு அடுத்த ஆள் முதல்வர் ஆவார்கள். எல்லோரும் இதைத்தான் சொல்கிறார்கள். ஆனால், இவரது ஸ்டேடஸுக்கு இவரைப்போய் நாம் உள்ளே வைத்தும் என்றால் அதன் தாக்கம் பெரிய சுனாமி அலையாக மாறும். தமிழ் நாடு பற்றிக் கொள்ளும். ஆளும் கட்சியான திமுகவை அடித்து விட்டு போய் விடும்’’ என்கிறார் பிரபல டாக்டர் லைஃப் லைன் ராஜ்குமார்.

Read more Photos on
click me!

Recommended Stories