யோசித்துப் பாருங்கள். நீங்கள் ஏதாவது நினைத்து புதிதாக ஆரம்பிக்கிற கட்சிக்கு, வேறு எந்த கட்சிக்கு வேண்டுமானாலும் போகலாம். அங்கு வகிக்கக்கூடிய மாநில பொறுப்பாக இருந்தாலும் சரி, திமுகவில் வகிக்கக்கூடிய வட்டச் செயலாளர் பொறுப்பானாலும் சரி, இரண்டும் ஒன்றுதான். நான் அடித்து சொல்கிறேன். தமிழ்நாட்டில் படித்து முனைவர் பட்டம் பெற்றவர்கள்கூட எஸ்.ஐ.ஆர் பற்றிய புரிதல் இல்லாமல் இருக்கும்பொழுது திமுகவின் பகுதி செயலாளர்களும், வட்டச் செயலாளர்களும், கிளை செயலாளர்களும் தெருத்தெருவாக, வீதி வீதியாகப் போய் வாக்குரிமைக்காக போராடிக் கொண்டிருக்கின்றனர்’’ எனத் தெரிவித்தார்.
இதற்கு பதிலடி கொடுத்துள்ள தவெகவினர், ‘ ‘மதிவதனி சரியாகத்தான் சொல்கிறார். தவெகவில் ஒரு சாதாரண மனிதன்கூட மாநில பொறுப்புக்கு வரலாம். ஆனால் திமுகவில் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், வரிசாக இல்லை என்றால் மாநிலப் பொறுப்புக்கு வர முடியாது. அதைத் தான் அவர் அப்படி சொல்கிறார்’’ எனக் கூறுகின்றனர்.