கட்சியில் இணைந்து விட்டு சமாதிகளுக்கு போனது செங்கோட்டையனுடன் தவெகவின் முக்கிய நிர்வாகிகளை அனுப்பி வைத்த விஜய், பெரிய தொண்டர் பட்டாளத்தையே அனுப்பி, செங்கோட்டையனை குஷி படுத்திவிட்டார் விஜய். இது ஒருபுறமிருக்க, செங்கோட்டையன் தவெகவில் சேர்ந்தது பற்றி, எடப்பாடி பழனிச்சாமியிடம் கேள்வி கேட்டபோது,‘‘ கட்சியில் இல்லாத ஒருவரை பற்றி பேசமாட்டேன்’’ என்று பதில் சொல்லியிருந்தார். இந்நிலையில் கோபிசெட்டிபாளையத்தில் 30 ஆம் தேதி அடுத்த கட்ட பிரச்சாரை தொடங்குகிற எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டதை விட, மூன்று மடங்கு கூட்டத்தை கூட்ட நிர்வாகிகளுக்கு கட்டளையிட்டுள்ளார்.