இந்நிலையில் ஆகஸ்ட் 15ம் தேதி காலை 8.30 மணியளவில் வழக்கம் போல் நான் கோவிலில் பூஜை செய்ய சென்றேன். அப்போது ஜெ.தீபா, அவரது கணவர் மாதவன் உட்பட 50 பேர் என்னை பூஜை செய்ய விடாமல் தடுத்து நிறுத்தினர். உன்னை யார் பூஜை செய்ய விட்டது? என தகாத வார்த்தையால் பேசி தாக்க முயன்றதாக ஹரிஹரன் புகாரில் தெரிவித்துள்ளார். மேலும் இனி இந்த கோவிலில் பூஜை செய்ய வந்தால் உன்னை கொலை செய்து விடுவோம் என ஜெ.தீபா, மாதவன் உட்பட பலரும் மிரட்டினார்கள். மேலும் பிள்ளையாரின் வெள்ளி கிரீடத்தையும் பறிக்க முயன்றனர்.