தொடங்கியது சிபிஐ விசாரணை..! யாருக்கு ஆப்பு..? பதற்றத்தில் கட்சிகள்..!

Published : Oct 31, 2025, 01:24 PM IST

சிபிஐ விசாரணை தவெகவுக்கு குறுகிய காலத்தில் பலம் அளிக்கலாம். ஏனென்றால் அது தமிழக அரசின் சதி என்ற நரேட்டிவை வலுப்படுத்தும். ஆனால் திமுகவுக்கு இது பெரும் சவாலாக அமையும். அழுத்தங்கள், போலீஸ் தவறுகள் வெளியானால் 2026 தேர்தலுக்கு பாதிப்பு ஏற்படலாம்.

PREV
14

தவெக தலைவர் விஜயின் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில் வேலுச்சாமிபுரத்தில் சிபிஐ அதிகாரிகள் நேரில் விசாரணை செய்து வருகின்றனர்.

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பிய கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு, விசாரணை தொடர்பான பல வழக்குகள் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன, இதன் விளைவாக வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. இந்த சம்பவத்தில் முதலில் உள்ளூர் காவல்துறை விசாரணை மேற்கொண்டது. அக்டோபர் 3 அன்று, சிபிஐ விசாரணைக்கான கோரிய மனுவை நிராகரித்து, சென்னை உயர் நீதிமன்றம் ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு விசாரணை அணை அமைக்க உத்தரவிட்டது. தவெக தலைவர்கள் "உயிரிழந்தவர்களை கைவிட்டு தப்பி ஓடியது" என்று விமர்சித்தது.

24

அக்டோபர் 13 அன்று, உயர் நீதிமன்ற அமர்வுகளின் முரண்பாட்டை கருத்தில் கொண்டு, வழக்கை சிபிஐக்கு மாற்ற உத்தரவிட்டது. முன்னாள் நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் கண்காணிப்புக் குழு அமைத்தது.

இந்நிலையில் சிபிஐ அக்டோபர் 17 அன்று விசாரணையை தொடங்கியது. இன்று வேலுச்சாமிபுரம் இடத்தை நேரில் மீண்டும் பார்வையிட்டு விசாரணையை தொடங்கியுள்ளது. கரூரில் தவெகவின் பொதுக்கூட்டத்தின்போது, மின்சார தடை ஏற்பட்டது, போதிய போலீஸ் பாதுகாப்பின்னை, கூட்ட நிர்வாகப் பிரச்சினைழைகளால் நெரிசல் ஏற்பட்டது. இது திமுகவின் என்று குற்றம்சாட்டுகின்றனர். குறிப்பாக கரூர் திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி மீது குற்றச்சாட்டுகளை எதிர்கட்சியினர் முன் வைக்கின்றனர்.

34

தவெகவினர் சிபிஐ விசாரணையை தங்களுக்கு சாதகமாக கொண்டாடுகின்றனர். தமிழக போலீஸ் விசாரணையை "ஒருதலைப்பட்சமானது" என்று தவெக்-வினர் குற்றம்சாட்டினர். சிபிஐ விசாரணை தமிழக அரசின் கட்டுப்பாட்டை மீறி, திமுக மீது தவெகவின் குற்றச்சாட்டுகளை ஆராய அவகாசம் அளிக்கும். நெரிசலால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மீது போலீஸ்,திமுக அழுத்தம் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. சிபிஐ இதை ஆராய்ந்தால், தவெகவுக்கு பாதிக்கப்பட்டவர்கள் என்ற அனுதாபம் வலுப்பெரும்.

ஆனாலும், சிபிஐ விசாரணை என்பது திமுக- தவெகவுக்கு இருபக்க கத்தியாக எந்தப்பக்கமும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று சொல்லப்படுகிறது. விஜய் தாமதமாக வந்தது, போதிய பாதுகாப்பை ஏற்பாடு செய்யாதது போன்ற குற்றங்கள் வெளிவந்தால் தவெகவுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்.

44

திமுக உச்சநீதிமன்ற உத்தரவை "இடைக்கால உத்தரவு" என்று கூறி எதிர்மறை வாதங்களை முன்வைக்கிறது. ஆனால், இது அவர்களுக்கு பின்னடைவாக மாறலாம். சிபிஐ விசாரணை தமிழக அரசின் கட்டுப்பாட்டை இழக்கச் செய்யும். போலீஸ் அதிகாரிகள், செந்தில் பாலாஜி உள்ளிட்ட திமுக தலைவர்கள் சம்மன் அனுப்பப்படலாம்.

சிபிஐ விசாரணை தவெகவுக்கு குறுகிய காலத்தில் பலம் அளிக்கலாம். ஏனென்றால் அது தமிழக அரசின் சதி என்ற நரேட்டிவை வலுப்படுத்தும். ஆனால் திமுகவுக்கு இது பெரும் சவாலாக அமையும். அழுத்தங்கள், போலீஸ் தவறுகள் வெளியானால் 2026 தேர்தலுக்கு பாதிப்பு ஏற்படலாம். விசாரணை டிசம்பர் 12 வரை நீடிக்கும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இறுதி அறிக்கை வரும் வரை, இது இரு கட்சிகளுக்கும் அபாயகரமான விளையாட்டு என்றே தோன்றுகிறது. உண்மை என்னவென்றால், 41 உயிர்களின் துயரத்தை வைத்து இரு கட்சிகளும் அரசியல் அறுவடை செய்ய முயற்சிக்கின்றனர்.

Read more Photos on
click me!

Recommended Stories