திருச்சூரில் செய்தியாளர்களிடம் பேசிய கேரள மாநில பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர், ‘‘சனாதன தர்மத்தின் எதிர்ப்பாளரும், திமுக தலைவருமான தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், உலக ஐயப்ப சங்கம மாநாட்டில் பங்கேற்பது இந்துக்களை அவமதிப்பதற்குச் சமம். சபரிமலை பாரம்பரியத்தையும், ஐயப்ப பக்தர்களையும் கேரள முதல்வர் பினராயி விஜயன் அவமதித்துள்ளார். ஸ்டாலினும், அவரது மகன் உதயநிதியும் ஹிந்துக்களையும், ஹிந்து மதத்தின் நம்பிக்கையையும் அவமதித்தவர்கள். ஹிந்துக்களையும் இந்து நம்பிக்கையையும் அவமதித்த பிறகு, இப்போது தேர்தலுக்காக ஐயப்பனைத் தேடி வந்துள்ளனர். இந்த செயல் அனைத்தும் ஓட்டு வங்கிக்காக மட்டும் தான்.
காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் திமுக போன்ற இண்டி கூட்டணி கட்சிகள் சபரிமலை நிகழ்ச்சிக்கு செல்வது, ஹிட்லர் யூதர்களை கொண்டாடுவது போன்றது. ஒசாமா பின் லேடன் சமாதானத்தின் தூதராக மாறுவது போன்றது. இது தேர்தல் நேரத்தில் மக்களை முட்டாளாக்கும் செயல் என்று கேரள, தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். ஆனால் மக்கள் இனியும் ஏமாற மாட்டார்கள். இண்டி கூட்டணியினர் ஹிந்து மத நம்பிக்கையாளர்களுக்கு சொன்னதையும், செய்ததையும் மறக்க மாட்டார்கள். ஐயப்ப பக்தர்களையும், சபரிமலையின் நம்பிக்கைகளையும் அழிக்க முயற்சிக்கும் பினராயி அரசாங்கத்தின் தலைமையில் நடைபெறும் உலகளாவிய ஐயப்ப மாநாடு ஒரு கேலிக்கூத்து.