இந்நிலையில் "பாஜக தலைமை மீது எனக்கு எந்த அதிருப்தியும் இல்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள சிறு பிரச்சினைகள் களையப்படும்" எனத் தெரிவித்தார்.பாஜகவின் டெல்லி தலைமை, அண்ணாமலைக்கு தேசிய அளவில் முக்கிய பொறுப்பு அளிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. நெல்லையில், அண்ணாமலைக்கு ரசிகர் மன்றம் வைத்தது, புதியத் தொழிலை தொடங்கியது உள்ளிட்ட ரிப்போட் பாஜக தலைமைக்கு சென்றாக கூறப்படுகிறது. இதனால் அண்ணாமலை மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டது.
இந்நிலையில் கோவை, கொடிசியா மைதானத்தில் தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில் 3 நாள் நடைபெறும் இயற்கை வேளாண் மாநாட்டின் முதல் நாளில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அதற்கு முன்பாக, கோவை விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடியை ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் சாமிநாதன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை உள்ளிட்டோர் வரவேற்றனர்.