தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை அருகே பாரபத்தியில் நடந்து முடிந்துள்ள நிலையில், தற்போது விஜய் பேசிய கருத்துகள் குறித்து பலரும் விவாதித்து வருகின்றனர்.
விஜய் தனது உரையில், ‘‘எம்ஜிஆர், விஜயகாந்தை புகழ்ந்து, மதுரை மண்ணின் உணர்வு, அவர்களின் மக்கள் பணியை நினைவுகூர்ந்தார். பாஜகவுடன் மறைமுக கூட்டணி குறித்த விமர்சனங்களை மறுத்து, "நாம் ஊழல் கட்சியா?" என கேள்வி எழுப்பினார். திமுகவின் பொய் வாக்குறுதிகளையும், நீட் தேர்வு தொடர்பான மோடியின் பிடிவாதத்தையும் விமர்சித்தார்.
234 தொகுதிகளிலும் மக்களின் வீட்டுப் பிள்ளைகளை வேட்பாளர்களாக நிறுத்துவோம் என்று அறிவித்தார். "தமிழக மக்கள் எனக்கு கடவுள் கொடுத்த வரம்; உங்களுக்காக உண்மையாக உழைக்க வந்திருக்கிறேன்" என்று உணர்ச்சிபூர்வமாக பேசினார்.