4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று, இன்று சென்னை திரும்பும் சசிகலாவுக்கு அவரது ஆதரவாளர்கள் உட்சாக வரவேற்பு கொடுத்து வருகிறார்கள்.
இந்நிலையில் இவரை வரவேற்பதற்காக சென்ற இரண்டு கார்கள் தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தீயில் கருகிய இரண்டு கார்களிலும் பட்டாசு இருந்ததாக கூறப்படுகிறது.
எனவே ஆதரவாளர்கள் வெடித்த பட்டாசின் பொறி... காரில் பட்டு இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தீவிபத்து ஏற்பட்ட உடனேயே... தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
கொளுந்து விட்டு எரியும் தீயை அணைக்கும் தீயணைப்பு துறையினர்.
கார்கள் பற்றி எரிந்ததால் முகைமூட்டமாக மாறிய அந்த இடம்
தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் பீச்சியடித்து காட்சி
சில மணிநேர போராட்டத்திற்கு பின் தீ அணைக்கப்பட்டது.
manimegalai a