ஆக்ரா முதல் சென்னை வரை மனதை வசிகரிக்கும் சுற்றுலா தளங்கள்

Published : Sep 27, 2022, 11:52 AM IST

இந்தியா ஒரு சொர்க்க பூமி ஜாதி மத வேறுபாடு இன்றி பல மக்களும் குலுமி வாழும் இச்சங்கத்தில் சுற்றுலாத்தலங்களும் ஏராளம் அந்த வகையில் வெளிநாட்டவரின் மனதை கவர்ந்த சுற்றுலாத்தலங்கள் சிலவற்றை இங்கு காணலாம்.

PREV
111
ஆக்ரா முதல் சென்னை வரை மனதை வசிகரிக்கும் சுற்றுலா தளங்கள்
தாஜ்மஹால்

சுற்றுலாத்தலங்களில் முதல் இடத்தைப் பிடித்திருப்பது தாஜ்மஹால் தான். உலக அதிசயமாக வியக்கப்படும் இந்த தாஜ்மஹால் 1631 ஆம் வருடம் துவங்கி கிட்டத்தட்ட 22 ஆண்டுகள் இருபதாயிரம் பணியாளர்களைக் கொண்டு யமுனா நதிக்கரைகள் கட்டப்பட்டது. காதல் மன்னனான ஷாஜகானால் இறந்து போன தனது மனைவி மும்தாஜிற்காக கட்டப்பட்ட இந்த காதல் மாளிகை இன்றளவும் உலகின் உன்னத காதல் சின்னமாக போற்றப்பட்டு வருகிறது. அதோடு கடந்த 2007 இல் தாஜ்மஹால் உள்ளது அதிசயங்களில் ஒன்றாக உறுதி செய்யப்பட்டது.

 

211
கோவா

அடுத்ததாக கோவா கடற்கரை கரையோரங்களில் 51 கடற்கரைகளைக் கொண்ட கோவா மிகச் சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாக உள்ளது. வெள்ளை மணலோடு, பனை மரங்கள் அற்புதமான கடலோர உணவுகள் என சுற்றுலா வருபவர்களை மனதை வெகுவாக கவர்ந்து விடுகிறது கோவா.

311
அமிர்தசரஸ்

சீக்கிய மதத்தின் ஆன்மீக தலைநகரமாக கருதப்படும் அமிர்தசரஸ் குரு ராம் தாசாஸ் தாசால் நிறுவப்பட்ட இது சீக்கிய நம்பிக்கையின் புனித தளமாக விளங்குகிறது. இங்குள்ள பொற்கோயில் நகரத்தின் மையப் பகுதிகள் அமைந்துள்ளது. இந்த கோவிலும் உலகின் சுற்றுலாத்தலங்களில் முக்கிய இடத்தை வகித்துள்ளது.

இமாச்சலப் பிரதேசத்தின் தலைநகரிக்கும் சிம்லா மலைவாச ஸ்தலங்களில் முக்கியமானதாகும். ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு ஈர்க்கப்படுகின்றனர்.

411
ஜெய்ப்பூர்

ராஜஸ்தானின் தலைநகரமான ஜெய்ப்பூர் "பிங்க் சிட்டி" என்று பிரபலமாக அறியப்படுகிறது சுற்றுலாத்தலங்களில் அறியப்பட்ட இந்த இடத்தில்  ஹவா மஹால், சிட்டி பேலஸ், ஜந்தர் மந்தர் மற்றும் அம்பர் கோட்டை அரச மரபு மற்றும் கட்டிடக்கடையை அனுபவிக்க சிறந்த இடமாகும்.

511
மைசூர் அரண்மனை

கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள மைசூர் அரண்மனை உலகப் புகழ்பெற்றது. இந்தியாவில் அதிகம் பார்வையிடக்கூடிய நினைவுச் சின்னங்களில் மைசூர் அரண்மனையும் ஒன்றாகும். அம்பா விலாஸ் அரண்மனை என்று இது அழைக்கப்படுகிறது. இந்த இடம் கடந்த காலத்தில் வளமான கட்டிடங்களை மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கிறது.

611
டார்ஜிலிங்

டார்ஜிலிங் உலகின் மிக உயர்ந்த சிகரங்களில் ஒன்றான கஞ்சன் ஜங்கா மவுண்ட் டார்ஜிலிங்கை இந்தியாவில் பார்வையிட லட்சக்கணக்கானோர் வெளிநாடுகளில் இருந்து வருவது வழக்கம். இது கடல் மட்டத்திலிருந்து 2050 மீட்டர் உயரத்தில் நிற்கிறது. தேயிலை தோட்டங்கள் அழகான காட்சிகள் குடும்பம் குடும்பமாக சுற்றிப் பார்க்க சிறந்த இடம் டார்ஜிலிங் ஆகும்.

711
சென்னை

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை முதலில் சென்னை தான் மிக நீள கடற்கரையான மெரினா தான் முதலில் ஞாபகத்திற்கு வரும். தொடர்ந்து வள்ளுவர் கோட்டம், பிரசித்தி பெற்ற மத வழிபாட்டுத் தலங்கள், வனவிலங்கு சாலைகள் என சென்னையில் சுற்றி பார்க்க ஏராள இடங்கள் உள்ளன.

மகாபலிபுரம் ஏழாம் நூற்றாண்டில் பல்லவ நாட்டு முக்கியத்துறைமாக இருந்துள்ளது. இந்த இடத்தில் அழகிய கடற்கரையும் வரலாற்று சிறப்புமிக்க  பல்லவ சிற்பங்களும் உலகப் புகழ் பெற்றவையாகும்.

811
மதுரை

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், திருமலை நாயக்கர் அரண்மனை, வண்டியூர் தெப்பக்குளம், காந்தி அரண்மனை எங்கும் பதியப்பட்டுள்ள ஓவிய வழிபாடுகளும் சிற்ப வேலைகளும் தூண் வேலைகளும் சுற்றுலா பயணிகளையும் வெகுவாக ஆச்சரியப்படுத்தி வருகிறது.

தமிழ்நாட்டில் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படும்  தஞ்சாவூர்.  உலகப் புகழ்வாய்ந்த இந்த ஊரில் பிரகதீஸ்வரர் கோயில் மிகப் புகழ்பெற்றதாகும். கிபி 1400 இல் சோழர்கள் காலத்தில் தோன்றியது இந்த ஊரின் புகழ்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குகை ஓவியத்திற்கு உலகப் புகழ் உள்ளது. சித்தன்னவாசல் இந்த ஊர் கிபி ஏழாம் எட்டாம் நூற்றாண்டுகளில் ஓவிய உலகப் புகழ் பெற்றது.

திருச்சிராப்பள்ளி உள்ள மலைக்கோட்டை இக்கோட்டை பல வரலாற்று நிகழ்வுகளை தன்னுள் கொண்டுள்ளது. காவிரி கரை ஓரம் அமைந்துள்ள இக்கோட்டை சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாகும்.

911
ஊட்டி

உதகமண்டலம் தமிழக மாநிலத்தில் உள்ள ஒரு மலை வாசஸ்தலமாகும் மலைகளின் ராணி என அழைக்கப்படும் இதில் தொடர் மொழிகள் பார்ப்பவர்களின் மனதை கம்மி கொள்கிறது குடும்பத்தோடும் நண்பர்களோடும் சுற்றுலா வரை இது சிறந்த தளமாகும் கோடி விடுமுறைகள் இங்கு லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிவது வழக்கமான ஒன்றாகும் மலைகளின் மேல் மேகக் கூட்டங்கள் மகுடம் சூட்டியது போல் அலங்கரித்து காட்சியளிப்பதாலே இதற்கு மலைகளின் ராணி என பெயர் வந்துள்ளது 

1011
கொடைக்கானல்

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படுகிறது. அடர்ந்த காடுகள் பூங்காக்கள் நீர்வீழ்ச்சிகள் ஏரிகள் என சுற்றுலா வருபவனின் உடலையும் மனதையும் குளிர வைக்கிறது கொடைக்கானல். 

வங்காள விரிகுடா கடலின் கரையில் அமைந்துள்ளது இங்குள்ள சிவன் கோவில் பிரசித்தி பெற்றதாகும். அதுபோக ராமாயண கால பல சுவடுகளும் இங்குள்ளது. அப்துல்கலாமின் நினைவிடம் என இந்த ஊரை சுற்றி பல இடங்கள் பார்ப்பதற்கு உண்டு.

1111
கன்னியாகுமரி

இந்தியாவின் தென்முனையில் உள்ளது கன்னியாகுமரி. வங்காள விரிகுடா இந்திய பெருங்கடல் மற்றும் அரபிக் கடல் ஆகிய மூன்றும் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் சூரிய உதயத்தையும் மறைவையும் காணலாம். இது ஒரு புகழ்பெற்ற சுற்றுலா தளமாகும். விவேகானந்தர் நினைவு மண்டபம் திருவள்ளுவர் சிலை மற்றும் காமராஜர் நினைவாலயங்கள் உள்ளன. கன்னியாகுமரியில் தான் மகாத்மா காந்தியடிகளின்  அஸ்தியும் கரைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!

Recommended Stories