ஒரு மனிதன் தினமும் குளித்தால் மட்டுமே, உடலும், மனதும் ஆரோக்கியமாக இருக்கும். ஆனால், இயற்கையாகவே அக்குள் மற்றும் இடுப்புப்பகுதி போன்ற பகுதிகளில் பாக்டீரியாக்களின் வளர்ச்சியின் காரணமாக உடல் தூர் நாற்றங்கள் ஏற்படுகின்றன.
. எனவே, இனிமேல் இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட ஒரு எளிமையான குறிப்பை தான் நாம் இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்துக் கொள்ள போகிறோம்.
சாதாரணமாக தலையிலும் உடம்பிலும் தண்ணீரை ஊற்றி நனைத்துக்கொண்டு வந்து விட்டால் மட்டும் போதாது. குளிப்பதிலும் குளித்த பின்னர் துடைப்பதிலும் சில முறைகளைப் பின்பற்ற வேண்டும்.
உடல் வியர்வை பாதிப்பைப் போக்க, இரசாயனங்களால் அதிக வாசனை ஏற்றப்பட்ட சோப்புகளைப் பயன்படுத்த, அதில் உள்ள கெமிக்கல்ஸ் நன்கு நீர் ஊற்றி உடலை அலசாத இடங்களில் சேர்ந்து, சரும வியாதிகளை உண்டாக்கிவிடும்.
நாம் குளிக்கும் தண்ணீரில் கல் உப்பை போட்டு குளிக்க வேண்டும். குளிக்கிற தண்ணீரில் இரண்டு கைப்பிடி அளவு உப்பை சேர்த்து, நன்றாக கரைத்து விட்டு அந்த தண்ணீரை தலையில் ஊற்றி குளித்து விட வேண்டும்.