இதற்கு கேலக்டோரியா எனப்படும் ஒரு நிலையும் காரணமாக இருக்கலாம். இது தாய்ப்பாலின் பொருத்தா உற்பத்தியைக் குறிக்கும். ஹார்மோன்களில் சமமற்ற நிலை இருப்பதால் வரலாம். அதிலும் பால் உற்பத்திக்கு உதவும் புரோலாக்டின் ஹார்மோன் அளவு அதிகரிப்பதும் காரணமாக இருக்கலாம். இறுக்கமான ஆடைகள் அணிவதும் அதனால் ஏற்படும் உராய்வும் உணர்திறன் மிக்கவர்களுக்கு மார்பில் வெள்ளை திரவம் வெளியேற காரணமாக இருக்கும்.
சிலருக்கு மார்பில் பால் போன்ற வெள்ளை திரவம் வருவது தானாக நின்றுவிடும். ஆனால் அடிக்கடி வந்தால் கவனிக்காமல் விடக்கூடாது. அதிலும் உடலில் எந்த தூண்டுதலும் இல்லாமல் ஏற்பட்டால் நிச்சயம் மருத்துவரை அணுக வேண்டும்.