குரங்கு மனமா, துறவி மனமா?
குரங்கு மரத்திற்கு மரம் தாவுவதை போல, மனிதர்களின் மனமும் தாவி கொண்டே இருக்கிறது. அதாவது ஒரு பிரச்சனையில் இருந்து மற்றொரு பிரச்சனைக்கு மனிதன் தாவுகிறான். அவ்வப்போது கிடைக்கும் சிற்றின்பங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கிறான். நீங்களும் அப்படிதான் நடந்து கொள்கிறீர்களா? ஆனால் உங்களுக்கு தெரியுமா? துறவிகள் பிரச்சனையை தவிர்க்கமுடியாது என்பதை புரிந்து கொள்கிறார்கள். பிரச்சனையின் வேர் என்ன என்பதை ஆராய்ந்து தீர்வு காண்கிறார்கள். சிற்றின்பங்களுக்கு அல்ல; நிலையான இன்பத்திற்கு உழைக்க வேண்டும் என்பதை துறவி மனம் புரிந்து கொள்கிறது.