முக்கிய குறிப்பு:
1. காதிற்குள் பூச்சி சென்றால் பட்ஸ் அல்லது வேறு ஏதேனும் பொருட்களை வைத்து பூச்சிகளை எடுக்க வேண்டாம். இப்படி செய்தால் பூச்சி மேலும் உள்ளே சென்று விடும். அதுமட்டுமின்றி, உங்கள் காது ஜவ்வு தான் சேதமடையும்.
2. காதிற்குள் பூச்சி சென்றால் உடனே விரலை விட வேண்டாம் இதனால் உங்களுக்கு காது வலி தான் அதிகமாகும்.
3. சிலர் காதிற்குள் பூச்சி சென்றால் தீக்குச்சியை வைத்து எடுக்க முயற்சிப்பார்கள். ஆனால் அப்படி செய்வது தவறு. இது காதில் இருக்கும் வேம்ஸ்களை காதினுள் தள்ளிவிடும். அதுமட்டுமின்றி இதனால் உங்கள் காதில் பிரச்சினையாகி, சில சமயம் காது கேட்காமல் கூட போய்விடும்.
4. தண்ணீர் , எண்ணெய் ஊற்றியும் காதிற்குள் இருக்கும் பூச்சி வெளியே வரவில்லை என்றால் உடனே மருத்துவரிடம் சென்று அதற்கான தீர்வை காணுங்கள். முக்கியமாக குழந்தைகள் இந்த பிரச்சனையை சந்தித்தால் உடனே அவர்களை மருத்துவரிடம் அழைத்து செல்லுங்கள்.
5. பூச்சிகள் உங்கள் காதிற்குள் செல்லாதவாறு எப்போதும் கவனமாக இருங்கள். முக்கியமாக வெளியே செல்லும்போது காதுகளை மூடிக்கொள்ளுங்கள்