அதிலும், யாருடைய கையில் மருதாணி அதிகமாக சிவக்கிறது..? என்பதை வைத்து அவர்கள் விருப்பும் நபர் மீது எந்த அளவிற்கு அன்பு இருக்கும் என்பதையும் கண்டறியப்படுகிறது. முன்பெல்லாம் மருதாணி கைகளில் சிவப்பாக பிடிப்பதற்கு, இலைகளில் பாக்கு, சுண்ணாம்பு போன்ற பொருள்களை வைத்து அரைப்பது வழக்கம். இன்றைக்கு மருதாணி இலைகளுக்குப் பதில் மெஹந்தியைத் தான் அதிகளவில் பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.எனவே, எதுவாக இருந்தாலும், உங்கள் கைகள் சிவக்க இந்த குறிப்பு பின்பற்றி பாருங்கள்.
மருதாணி கைகளில் வைத்து குறைந்தபட்சம் ஒன்றரை மணிநேரமாவது அதை கலைக்காமல் அப்படியே வைத்திருக்க வேண்டும். ஒருநாள் முழுவதும் அதை மாற்றாமல் வைத்திருப்பது கூடுதல் நிறம் பெற காரணமாக இருக்கும்.
3. மருதாணி காய்ந்தபின் குறைந்தபட்சம் 6 மணி நேரம் வரை தண்ணீரில் கையை நனைக்காமல் இருப்பது நல்லது. இது மருதாணியின் நிறம் நீண்ட நாட்கள் நிலைத்து இருக்கச் செய்யும்.
4. மருதாணி இட்டவுடன் தூங்கச் சென்றால் நமது உடைகளில் எல்லாம் அது பட்டு, துணிகளில் கறை ஏற்படும். இதை தவிர்க்க மருதாணி இட்ட கைகளில் கையுறையை போட்டுக் கொள்ளலாம்.
5. நீங்கள் கைகளை கழுவும் போது, கடுகு எண்ணெய்யைக் கொண்டு நீக்கலாம். இல்லையென்றால், யூகலிப்டஸ் எண்ணெய்யையும் நீங்கள் உபயோகிக்கலாம்.