மருதாணி இலையுடன் கிழங்கு மஞ்சளைப் பொடியாக்கி, பாதங்களை வெதுவெதுப்பான நீரில் சுத்தம் செய்து இரவு நேரங்களில் உறங்க செல்வதற்கு முன்பு வெடிப்பு இருக்கும் இடங்களில் பற்று போடுங்கள். அவை காய்ந்ததும் சுத்தமாக கழுவி எடுங்கள். வாரத்துக்கு இரண்டு நாட்கள் இப்படிச் செய்துவந்தால் நாளடைவில் வெடிப்பு மறைய தொடங்கும்.