இன்றைய காலக்கட்டத்தில் ஒவ்வொரு நபரும் முடி உதிர்வு பிரச்சனையால் சிரமப்படுகிறார்கள். நாளடைவில் இந்த பிரச்சனை தொடர்ந்தால் நம்முடைய முக அழகும் கெட்டுவிடும் அபாயம் உண்டு. இது போன்ற சூழ்நிலையில், முடி உதிர்வை சமாளிக்க பல வழிகள் உள்ளன, ஆனால் சிலர் இதற்கு வீட்டு வைத்தியத்தை பின்பற்ற விரும்புகிறார்கள். எனவே, நாம் முடி உதிர்வை எப்படி இயற்கையிலேயே சமாளிப்பது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்வோம்.
உஷ்ணம் அதிகம் இருப்பவர்களுக்கு தலைமுடி வேரில் இருந்து உதிர்வது வழக்கம். இதனால் ரத்த ஓட்டம் இல்லாமல் தலையில் வறட்சி ஏற்பட்டு,முடி உதிர்வை அதிகரிக்கிறது. இந்த பிரச்சனையை விளக்கெண்ணை சிறந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. எனவே, விளக்கெண்ணை வைத்து எப்படி ,முடி உதிர்வை கட்டுப்படுத்துவது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
35
Hair growth- Health Benefits:
பொதுவாக, தேங்காய் எண்ணெயை விட விளக்கெண்ணெயில் இருக்கும் சத்துக்கள் நம் உடம்பில் இருக்கும் உஷ்ணத்தையும் குறைத்து, முடி வளர்ச்சியை அதிகரிக்க செய்யும்.
முடி வளராதவர்கள், முடி வறண்டு கணப்படுபவர்கள் மற்றும் இளநரை அதிகம் கொண்டவர்கள் விளக்கெண்ணெயை பயன்படுத்தி நன்மை பெறலாம்.
45
Hair growth- Health Benefits:
ரத்த ஓட்டத்தை சீராக்கி புதிய முடி வளச்சியை தூண்டிவிடும். இதனால் இழந்த இடத்தில் கூட முடி வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது.. நீங்கள் தூங்கும் முன் புருவங்களில், சிறிதளவு விளக்கெண்ணையை தடவி விட்டு தூங்கினால் புருவ முடி நன்கு அடர்த்தியாக வளரும்.
மேலும், விளக்கெண்ணெய் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை காளான் பண்புகளைக் கொண்டுள்ளது. சேதமடைந்த முடியை சரியாக்கி பொடுகை நீக்கும் தன்மை கொண்டது.
இருப்பினும், சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும்.மேலும் சுத்தமான விளக்கெண்ணையை அப்படியே தலையில் தடவவும் முடியாது. இது போன்ற சூழ்நிலையை கையாள நீங்கள், மரச்செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெயுடன், விளக்கெண்ணெய் சேர்த்து கொள்ளுங்கள்.
ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெயுடன் 100 எம்எல் அளவிற்கு என்ற விகிதத்தில் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். விளக்கெண்ணையில் இருக்கும் குளிர்ச்சி தன்மை காரணமாக அதிக குளிர்ச்சி பிடிக்காதவர்கள், மிளகுகளை பொடித்து எண்ணெயில் போட்டுக் கொள்ளுங்கள். இதனை அன்றாடம் தேங்காய் எண்ணெய் தடவுவுது போல் தடவுங்கள், வித்தியாசம் நீங்களே பார்க்கலாம்...