உங்களுக்கு விறைப்புத் தன்மை பிரச்சனை இருக்கா..? சாம்பிராணி போடுங்கள்..! ஆயுர்வேத மருத்துவ ரகசியம் தெரியுமா..?

First Published Sep 22, 2022, 2:04 PM IST

Health Benefits Of Sambrani: ஆண்களின்  விறைப்புத் தன்மையை அதிகரிக்க, சாம்பிராணியை எடுத்துக்கொள்வது சிறந்ததாக ஆயுர்வேத மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். 

இந்தியாவில் பெரும்பாலான வீடுகளில் சாம்பிராணி பயன்படுத்தப்படுகிறது. இதன் புகை சுற்றுச்சூழலில் சக்திவாய்ந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சாம்பிராணி போடுவது என்பது வீட்டில் வெறும் வாசனைக்காக மட்டும் இல்லை பல நன்மைகள் அடங்கியுள்ளது என்பதை பலரும் அறியாமல் உள்ளனர். சாம்பிராணி, காற்றைச் சுத்திகரித்து வெளிச்சூழலை உயிரோட்டமாக உணர வைக்கும். 

  மேலும் படிக்க...சமையல் மேடையில் படிந்துள்ள உப்பு கறையை நொடியில் போக்க., குப்பையில் தூக்கி போடும் 1 ரூபாய் ஷாம்பு கவர் போதும்..

சாம்பிராணிப் புகை என்பது நுண் கிருமிகளை அழிக்க வல்லது. குறிப்பாக மனச்சோர்வு, கவலை இருக்கும்போது சாம்பிராணி புகை போட்டால்  நமக்கு வரும் கடினமான துன்பங்கள் எல்லாமே விலகி ஓடும் என்பது ஒரு நம்பிக்கை.

பண்டைய காலம் முதல் மதவழிபாட்டிற்கும் மருத்துவத்திற்கும் சாம்பிராணி பயன்பட்டு வருகிறது. வெள்ளைக் குங்கிலிய மரப் பட்டையைக் கீறி, அதன் கோந்தைச் சேகரித்து, அதில் இருந்து உருவாக்கப்படுகிறது சாம்பிராணி.

இன்றைய கால கட்டத்தில் சாம்பிராணி மரங்கள் வெகுவாக அழிவின் விளிம்பை நோக்கிச் சென்று கொண்டு இருக்கிறது. எனினும், இந்தியா, குஜராத், உள்ளிட்ட ஒரு சில மேற்கத்திய மாநிலங்களில் சாம்பிராணி அதிகம் பயன்பாட்டில் உள்ளது.

 வீடுகளில் சாம்பிராணி லக்ஷ்மி கடாக்ஷத்தை தரவல்லது. மனச்சோர்வை நீக்கி, புத்துணர்வைத் தருவதுடன்,  தீய சக்திகளை அழித்து நேர்மறையான எண்ணங்களையும் கொடுக்கிறது.  

  மேலும் படிக்க...சமையல் மேடையில் படிந்துள்ள உப்பு கறையை நொடியில் போக்க., குப்பையில் தூக்கி போடும் 1 ரூபாய் ஷாம்பு கவர் போதும்..

வயிறு தொடர்பான பிரச்சனைகள்:

 குடலில் சேரும் வாயுவை அகற்றுவதற்கும், வயிற்றுப்போக்கு போன்றவற்றைப் குணப்படுத்தவும் சாம்பிராணி ஆயுர்வேத மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. சில விதமான வாத நோய்கள் மற்றும் கட்டிகளைக் குணப்படுத்துவற்காகவும் வெள்ளைக் குங்கிலியம் பயன்படுத்தப்படுகிறது. 

விந்தணு தரத்தை மேம்படுத்த:

இது ஆண்களுக்கான ஒரு சிறந்த வரப்பிரசாதமாக உள்ளது. ஆண்களில் பாலியல் சகிப்புத்தன்மையை ஊக்குவிக்கவும், விறைப்புத்தன்மையை நீண்ட நேரம் நீட்டிக்கவும் சாம்பிராணி பயன்படுகிறது. 

ஆண் விந்தணு தரத்தை மேம்படுத்தவும், பாலியல் தூண்டுதலை அதிகரிக்கவும் பாலுடன் கலந்து சாம்பிராணித் தூளை குடிப்பது நல்ல பயன் தரும்.  சாம்பிராணி இறுதியில் மோக்ஷத்தை தரவல்லது.இதனை நீங்கள் டானிக் போலவும் சாப்பிடலாம்.

வெள்ளைக் குங்கிலியக் கோந்தைப் பொடி செய்து நல்லெண்ணையில் கலந்து காய்ச்சி, மூட்டுகளில் பூசிவந்தால் மூட்டு வலி குணமாகும். அதேபோல், சாம்பிராணியை நெய்விட்டுப் பொரித்து, தண்ணீர்விட்டு நன்றாகக் குழைத்து பெண்கள் உண்டால், வெள்ளைப்படுதல் நிற்கும். 
 
வெள்ளைக் குங்கிலியத்தில் இருந்து தயாரிக்கப்படும் சாம்பிராணியை 1 கிராம் எடுத்து 1 கோப்பைப் பாலில் கலந்து குடித்தால் இருமல், மார்புச்சளி, ரத்த மூலம் ஆகியவை கட்டுப்படும்.

கெட்டக் கொழுப்புகளைக் குறைக்கும்:

அதேபோல,  சாம்பிராணி உடலில் உள்ள கெட்டக் கொழுப்புகளைக் குறைத்து உடல் எடையை குறைக்கவும் பயன்படுகிறது. ஆம், வெள்ளைக் குங்கிலியத்தில் இருந்து உருவாக்கப்பட்ட சாம்பிராணியை 2 கிராம் அளவு எடுத்து, அதை பாலில் கலந்து குடித்தால் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்கும் தன்மை கொண்டது. 

  மேலும் படிக்க...சமையல் மேடையில் படிந்துள்ள உப்பு கறையை நொடியில் போக்க., குப்பையில் தூக்கி போடும் 1 ரூபாய் ஷாம்பு கவர் போதும்..

click me!