துணிகளில் படிந்த கறையை போக்க...இப்படி ஒருமுறை, இந்த லிக்விட் பயன்படுத்தி பாருங்கள்..! நீங்களே ஷாக் ஆயிடுவீங்க!

First Published Oct 8, 2022, 2:30 PM IST

Washing clothes easy tips: துணிகளில் ஒட்டி இருக்கும் கறையை எளிமையான முறையில் எப்படி நீக்குவது என்பதை, இந்த பதிவில் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். இல்லத்தரசிகளுக்கு இந்த குறிப்பு மிக மிகப் பயனுள்ளதாக இருக்கும்.

வீட்டில் துணி துவைப்பது என்பது பலருக்கும் மிக சிரமமான வேலையாக தான் தோன்றும். ஒரு பெரிய குடும்பத்தில் துணி துவைத்து முடிக்கவே நீண்ட நேரமாகும். இன்றைய காலத்தில் என்னதான் வாஷிங் மெஷின் மூலம் துணி துவைத்து பார்த்தாலும், அதில் ஒட்டி இருக்கும் கறை மட்டும் போகவே போகாது. இதனால் சில நாட்களிலேயே உங்களின் புது துணிகளை நீங்கள் தூக்கி குப்பையில் போட வேண்டியிருக்கும். அப்படி, ஏதும் இல்லாமல் உங்கள் துணிகளில் படிந்துள்ள கறையை எப்படி சுலபமான முறையில் போக்குவது என்பதை தான் நாம் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.
 

அழுக்கு துணிகளை கண்ட இடத்தில் போடாமல் அதற்கென இருக்கும் கூடையில் போட பழக வேண்டும். துணிகளை மொத்தமாய் தண்ணியில் முக்காமல் தினசரி உடுத்தும் ஆடைகள், பட்டு துணிகள், உள்ளாடைகள் என தனித்தனியாய் ஊற வைத்து துவைக்க வேண்டும்.

பேக்கிங் சோடாவும், வினிகரும் சேர்ந்த தண்ணீரில் சாய கறை படிந்த துணியை ஒரு அரை மணி நேரம் போட்டு ஊற வைத்து விடுங்கள். அதன் பிறகு  கறை உள்ள இடத்தில் லேசாக தேய்த்தாலே போதும். சாயக்கறை அனைத்தும் காணாமல் போய் துணி பழைய நிறத்திற்கு வந்து விடும். 
 

washing machine

துணிகளின் உள்புறம் வெளியில் தெரியுமாறு காய வைத்தால் துணிகள் வெயிலில் நிறம் மாறாமல் இருக்கும். உள்ளாடைகளை தனியே துவைக்கும் பழக்கத்தினை வைத்திருப்பது கிருமிகள் தொற்றை தவிர்க்கும்.

துணிமணிகளில் இருக்கும் விடாபடியான மஞ்சள் கறை நீக்குவதற்கு, கொஞ்சம் எலுமிச்சை சாற்றை அதில் தேய்த்துக் கொள்ளுங்கள்.  

துணிகளின் தரத்திற்கேற்ப சோப் தூள் சேர்த்து அதனுடன் எலுமிச்சை சாறு சேர்த்து ஊற விடுங்கள். அதிகப்படியான அழுக்கு துணிகளில் இருந்தால் வினிகரும் பயன்படுத்தலாம். 

அதேபோன்று, வெள்ளை சட்டையில் கிறுக்கல் இருந்தால், எவ்வளவு விலை உயர்ந்த சட்டையாக இருந்தாலும், நாம் பயன்படுத்த முடியாமல் போகும். இது போன்ற கடினமான கறைகளை லைசால் கொண்டு எளிமையாக நீங்கி விட முடியும். 

இதன் பிறகு அந்த துணிகளை எப்போதும் போல் தண்ணீரில் சோப்பு பவுடர் போட்டு ஊற வைத்து எடுத்து விடலாம். துணியின் நிறமும் மங்காது கறையும் மறைந்துவிடும். துவைத்த துணிகளை நல்ல காற்றோட்டமான இடத்தில் உலர வைப்பது நல்லது. கிருமிகளோடு, கெட்ட வாடையும் நீங்கும்

 மேலும் படிக்க...துணிகளில் விடாபிடி கறை போக , கரப்பான் பூச்சி தொல்லை நீங்க, வீட்டிற்கு உபயோகமான சின்ன சின்ன சமையல் குறிப்புகள்

click me!