பட்டு: உடலுக்கு ஏற்ற வகையில் சில ஆடைகள் இருக்கின்றன. அதில் முதலிடம் பிடிப்பது பட்டு. இவை விலையுயர்ந்த போதிலும் மென்மையாகவும், சருமத்திற்கு இதமாகவும் இருக்கிறது. இது உடல் நிலையின் இயற்கையாகவே வெப்பநிலையை சீராக வைக்க உதவுகிறது. தூங்குவதற்கு பயன்படுத்தப்படும் பைஜாமாக்களுக்கு பாலிஸ்டர் போன்ற மெட்டீரியல்களை பயன்படுத்தாமல் பட்டுத்துணியை பயன்படுத்தலாம். அது மிகவும் ஏற்றதாகும்.
மெரினோ உள்: இது மிகவுப் மென்மையானது. இது அனைத்து தட்பவெப்ப நிலைகளுக்கும் ஏற்றது. குறிப்பாக கெட்ட வாடைகளை ஏற்படுத்தாத ஒரு மெட்டீரியலாகும். ஈரப்பதத்தை குறைக்கும் தன்மை இருப்பதால் வியர்வையால் ஏற்படும் துர்நாற்றத்தை குறைக்கும் தன்மை கொண்டது.
மூங்கில்: மூங்கில் செடிகளில் இருந்து தயாரிக்கப்படும் மெட்டீரியல் இவை. இது சுற்றுச்சூழலுக்கும், சருமத்திற்கு மிகவும் ஏற்றது. இதில் ஆன்டி பாக்டீரியல் பண்புகள் இருப்பதால் பாக்டீரியா மற்றும் கிருமிகளை எதிர்த்து போராடும். கோடைக் காலத்தில் குளிர்ச்சியாகவும், குளிர்காலத்தில் வெப்பத்தையும் கொடுக்கும். இது இயற்கையாகவே புற தன்மைகளிலிருந்து (UV Rays) பாதுகாக்கும் தன்மை கொண்டது. இதனால் சூரிய வெப்பத்திலிருந்து நம்மை பாதுகாக்கவும் செய்கிறது.
லினன்: இந்த துணிகள் வெப்பமான கால சூழலுக்கு ஏற்றது. இது கிருமித் தொற்றை தடுக்கும் தன்மை கொண்டது. பயன்படுத்த பயன்படுத்த தரம் இன்னும் மேம்படும். விலை அதிகம் என்றாலும் பலராலும் கோடைக் காலத்தில் விரும்பி வாங்கப்படும் ஒரு துணி வகை. குறிப்பாக வெயில் காலங்களில் வெள்ளை லினன் ஆடைகள் அணிவதை பலரும் விரும்புகின்றனர்.
காட்டன்: காட்டன் ஆடைகள் நம் உற்ற தோழன். இயற்கையாகவே சுவாசிக்கும் தன்மை கொண்டவை. சலவை செய்ய செய்ய மேலும் மென்மையாக மாறும். ஆனால் துவைத்த உடன் சுரங்கும் தன்மை இருக்கும். சென்சிட்டிவ் சருமம் உள்ளவர்களுக்கும் அலர்ஜி சருமம் உள்ளவர்களுக்கும் காட்டன் துணிகளே சிறந்தது. கடைகளில் 100% காட்டன் துணிகளை தேர்ந்தெடுத்து வாங்க வேண்டும். கலப்பட காட்டன் அல்லது பிளாஸ்டிக் கலந்திருக்கும் காட்டன் ஆடைகளை தவிர்க்க வேண்டும். அடுத்த முறை ஆடை செல்ல வாங்கும் பொழுது மெட்டீரியலுக்கு முக்கியத்துவம் கொடுத்து வாங்குங்கள்.