நம்முடைய வீடுகளில் கண்டிப்பாக உப்பு, புளி, மிளகாய் இருக்க வேண்டும் என்பார்கள், தீர்ந்து போவதற்கு முன்பாகவே இவற்றை கண்டிப்பாக வாங்கி வைக்க வேண்டும். இல்லையென்றால் வீட்டில் தரித்திரம் வந்து தாண்டவமாடும் என்பார்கள். அதேபோன்று , முக்கியமாக நம்முடைய வீடுகளில், உள்ள சமையல் அறையில் இந்த தவறு மட்டும் நடக்கவே கூடாது. அந்த காலத்தில் நம்முடைய பாட்டி அம்மா எல்லாம் இந்த ஒரு விஷயத்தில் கவனமாக இருப்பார்கள்.
தானத்தில் சிறந்த தானம் அன்ன தானம் ஆகும். அந்த அன்ன பூரணியின் அருள் ஆசியும் முழுமையாக நிறைவாக பெறுவதற்கு, நீங்கள் அடுப்பில் சாதம் வைக்கும் போது, சிந்தாமல், சிதறாமல் வைக்க வேண்டும். ஒருபோதும், சாத பருக்கை நெருப்பில் பட்டு கருகிப் போகக் கூடாது. இது உங்கள் வீட்டிற்கு நல்லது அல்ல. . நம் வீட்டில் இருக்கும் அரிசி தான் அன்னபூரணி, எனவே அவற்றை பக்குவமாக பார்த்து வடிக்க வேண்டும்..