வீட்டின் சமையல் அறையில் இந்த ஒரு பொருள் மட்டும் தீர்ந்து போனால்...தரித்திரம் தாண்டவமாடும், வறுமை வந்து சேரும்

First Published Sep 3, 2022, 12:01 PM IST

Sadam vaikkum murai: உங்கள் வீட்டில்  மகாலட்சுமியின் அருள் கிடைக்க வேண்டும் என்றால், இந்தத் தவறை மட்டும் இனிமேல் செய்யாமல் இருந்தால் அது உங்கள் குடும்பத்திற்கு நல்லது. 

நம்முடைய வீடுகளில் கண்டிப்பாக உப்பு, புளி, மிளகாய் இருக்க வேண்டும் என்பார்கள், தீர்ந்து போவதற்கு முன்பாகவே இவற்றை கண்டிப்பாக வாங்கி வைக்க வேண்டும். இல்லையென்றால் வீட்டில் தரித்திரம் வந்து தாண்டவமாடும்  என்பார்கள்.   அதேபோன்று , முக்கியமாக நம்முடைய வீடுகளில், உள்ள சமையல் அறையில் இந்த தவறு மட்டும் நடக்கவே கூடாது. அந்த காலத்தில் நம்முடைய பாட்டி அம்மா எல்லாம் இந்த ஒரு விஷயத்தில் கவனமாக இருப்பார்கள். 

ஆனால், இன்றைய பிஸியான வாழ்கை முறையில், யாரும் இதனை பற்றி கருத்தில் கொள்வதே இல்லை. எல்லாவற்றையும் நாம் மறந்து தொலைத்து வருகிறோம். அப்படி, நம்முடைய சமையல் அறையில் என்ன நாம் செய்யக்கூடிய தவறு இருக்கிறது என்று யோசிக்கிறீர்களா..?. ஆம், உங்கள் வீட்டின் மகாலட்சுமியின் அருள்கிடைக்க வேண்டும் என்றால், இந்தத் தவறை மட்டும் இனிமேல் செய்யாமல் இருந்தால் அது உங்கள் குடும்பத்திற்கு நல்லது. 

மேலும் படிக்க...உங்கள் பூஜை பாத்திரங்கள் பளபளன்னு மின்ன வேண்டுமா..? அப்படினா..இதை ஒருமுறை தயார் செய்து பயன்படுத்தினாலே போதும்

தானத்தில் சிறந்த தானம் அன்ன தானம் ஆகும். அந்த அன்ன பூரணியின் அருள் ஆசியும் முழுமையாக நிறைவாக பெறுவதற்கு, நீங்கள் அடுப்பில்  சாதம் வைக்கும் போது, சிந்தாமல், சிதறாமல் வைக்க வேண்டும். ஒருபோதும், சாத பருக்கை நெருப்பில் பட்டு கருகிப் போகக் கூடாது. இது உங்கள் வீட்டிற்கு நல்லது அல்ல. . நம் வீட்டில் இருக்கும் அரிசி தான் அன்னபூரணி, எனவே அவற்றை பக்குவமாக பார்த்து வடிக்க வேண்டும்..

சாப்பாட்டு பானையில் ஒரு பருக்கை சாதம் கூட வறண்டு போய் விடக்கூடாது. நீங்கள் குக்கரில் சாதம் வடித்தாலும் சரி, அதை உடனடியாக ஹாட் பேக்கில் மாற்றிக் கொள்ளலாம். தவிர குக்கரில் சாதத்தை வறண்டு போக விடாதீர்கள். இரவு முழுவதும் காலியான பாத்திரம்  காயவே கூடாது. இதனால் உங்கள் வீடும் வறுமை நிலைக்கு தான் தள்ளப்படும். இது நிதர்சனமான உண்மை.

மேலும் படிக்க...உங்கள் பூஜை பாத்திரங்கள் பளபளன்னு மின்ன வேண்டுமா..? அப்படினா..இதை ஒருமுறை தயார் செய்து பயன்படுத்தினாலே போதும்

அதேபோன்று, பானையில் உள்ள சாதத்தை மொத்தமாக காலி பண்ண கூடாது.. உடனடியாக சிங்கிள் போட்டு இரவு முழுவதும் காய வைக்க கூடாது. மாறாக நீங்கள் ஒரு கைப்பிடி அளவு சாப்பாடு சாப்பாட்டு குண்டானில் வைத்து, இரவு தூங்க செல்வதற்கு முன்பு  தண்ணீர் ஊற்றி இருக்க வேண்டும். இதனால் வரை தெரியாமல் இந்த தவறை  செய்திருந்தால் பரவாயில்லை. இனிவரும் காலங்களில் திருத்திக்  கொள்ளுங்கள்..அப்போது தான் சகல செல்வத்தையும் அள்ளி தரும் அன்ன பூரணி உங்கள் வீடுகளில் வாசம் செய்வாள்.


மேலும் படிக்க...உங்கள் பூஜை பாத்திரங்கள் பளபளன்னு மின்ன வேண்டுமா..? அப்படினா..இதை ஒருமுறை தயார் செய்து பயன்படுத்தினாலே போதும்

click me!