ஆசிரியர் தினத்தை ஏன் கொண்டாட வேண்டும்..?
மாதா, பிதா வரிசையில் மூன்றாவது இடம்பெற்றுள்ள ஆசிரியர்கள், நமக்கு ஒழுக்கம், தன்னம்பிக்கை, பொது அறிவு என பல்வேறு விஷயங்களைக் கற்பித்து, உண்மையான வழிகாட்டியாக திகழ்கின்றனர். ஆம், சுய நலம் பாராமல் மற்றவர்களின் குழந்தைகள் முன்னேற உழைப்பவர்களாக இருக்கிறார்கள் ஆசிரியர்கள். ஊதியம் வாங்கி வேலை பார்க்கிறோம் என்ற உணவை தாண்டி, பல தியாகங்களை செய்து அர்ப்பணிப்புடன் தங்கள் மாணவர்களின் உயர்வுக்கு காரணமாகவும் அமைகிறார்கள் இன்றும் பல ஆசிரியர்கள்.