1. நீங்கள் உங்களது வீட்டு பிரிட்ஜில் இட்லி, தோசை மாவு பொங்கும் பிரச்சினையை சந்திக்கிறீர்கள் என்றால், மாவின் மேல் வாழையிலேயே வெட்டி கவிழ்த்து போட்டு வைத்தால், மாவு பொங்குவது தடுக்கப்படும்.
2. நீங்கள் தோசை மாவு அரைக்கும் போது அதனுடன் ஒரு கைப்பிடி அளவு தோல் இல்லாத வேர்கடலையை சேர்த்து அரைத்து, அதில் தோசை சுட்டு சாப்பிட்டால் சுவை அருமையாக இருக்கும்.
3. வெந்தயக் கீரையை சமைக்கும் முன் அதில் சிறிதளவு வெல்லம் சேர்த்து கொண்டால், கசப்பு சுத்தமாகவே தெரியாது. சாப்பிடுவதற்கும் சுவையாக இருக்கும்.
4. . சீனி டப்பாவில் அடிக்கடி எறும்புகள் வருவது வழக்கம். எனவே அவற்றை வராமல் தடுக்க, சீனி டப்பாவில் நான்கு அல்லது ஐந்து ஏலக்காய் போட்டு வைத்தால் எறும்புகள் அதன் வாசனைக்கு வராது.