Food Warning Labels: வெளிநாட்டு கம்பெனிகள் இந்தியாவில் தரம் குறைந்த பொருட்களை விற்கிறாங்களா? தெரிஞ்சுக்க வேண்டிய 5 விஷயங்கள்!

Published : Aug 26, 2026, 09:37 AM IST

Food Warning Labels: உலகின் மிகப்பெரிய உணவு நிறுவனங்கள், வெளிநாடுகளில் கடுமையான விதிகளைப் பின்பற்றும் நிலையில், இந்தியாவில் சுகாதார எச்சரிக்கை லேபிள்களை எதிர்க்கின்றன. இங்கு விற்கப்படும் பொருட்களில் தரம் குறைந்த மூலப்பொருட்கள் இருக்கிறதாம்.!

PREV
15
இந்தியாவில் விற்கப்படும் ஃபேண்டாவில் மூன்று மடங்கு சர்க்கரை அதிகம்! வெளிநாட்டு நிறுவனங்களின் இரட்டை வேடம்.

லண்டனில் விற்கப்படும் ஃபேண்டாவுடன் ஒப்பிடும்போது, இந்தியாவில் விற்கப்படும் அதே பிராண்ட் பானத்தில் சுமார் மூன்று மடங்கு அதிக சர்க்கரை இருப்பதாக ராய்ட்டர்ஸ் அறிக்கை கூறுகிறது. இந்திய ஃபேண்டாவில் செயற்கை நிறமியும் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிக சர்க்கரை உட்கொள்வது உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கலாம் என்பதால், உணவுப் பொருட்களில் தெளிவான ஊட்டச்சத்து எச்சரிக்கைகள் தேவை என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

25
இந்தியாவில் மட்டும் தரமற்ற பொருட்களை விற்பனை செய்வது ஏன்?

கோகோ-கோலா, நெஸ்லே போன்ற உலகளாவிய நிறுவனங்கள் ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் தெளிவான ஊட்டச்சத்து மற்றும் ‘டிராஃபிக் லைட்’ லேபிள்களைப் பயன்படுத்துகின்றன. ஆனால் இந்தியாவில் முன்பக்க எச்சரிக்கை லேபிள்களுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. இது இந்திய நுகர்வோருக்கு வெவ்வேறு தரநிலைகள் பின்பற்றப்படுகிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

35
உணவு நிறுவனங்களின் அழுத்தத்திற்கு பணிந்ததா FSSAI? சிவப்பு எச்சரிக்கை லேபிள்கள் நிராகரிக்கப்பட்டதன் பின்னணி.

சர்க்கரை, உப்பு, கொழுப்பு அதிகமுள்ள உணவுப் பொருட்களுக்கு சிவப்பு எச்சரிக்கை லேபிள்களை அறிமுகப்படுத்தும் முயற்சிக்கு உணவு நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி தெரிவித்துள்ளது. குறிப்பாக, சந்தையில் உள்ள சுமார் 80% பொருட்கள் ‘அதிக சர்க்கரை, உப்பு அல்லது கொழுப்பு’ என்ற எச்சரிக்கையைப் பெறும் என தொழில்துறை தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து FSSAI தனது அணுகுமுறையை மாற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது.

45
உச்ச நீதிமன்றத்தின் கடுமையான தலையீடு!

இந்தியர்களின் உடல்நலனில் அரசு அக்கறை கொண்டுள்ளது என்பதை உலகுக்குக் காட்ட வேண்டும் என உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. உடல்நல ஆர்வலர்கள் தாக்கல் செய்த மனுவைத் தொடர்ந்து, அதிக சர்க்கரை, உப்பு, கொழுப்பு கொண்ட உணவுகளுக்கான முன்பக்க எச்சரிக்கை லேபிள்கள் குறித்து FSSAI-யின் நிலைப்பாட்டை நீதிமன்றம் கேள்விக்குட்படுத்தியது. நுகர்வோர் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் தெளிவான பேக்கேஜிங் தகவல்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

55
மேகி, கிட்கேட்டில் பாமாயிலுக்குப் பதிலாக சூரியகாந்தி எண்ணெய் பயன்படுத்தப்படுவது எப்போது?

மேகி நூடுல்ஸின் இந்தியாவில் விற்கப்படும் அனைத்து வகைகளிலும் பாமாயில் பயன்படுத்தப்படுவதாகவும், பிரிட்டனில் பல வகைகளில் அதிக விலை கொண்ட சூரியகாந்தி எண்ணெய் பயன்படுத்தப்படுவதாகவும் ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. சமூக ஊடகங்களில் எழுந்த விமர்சனங்களுக்கிடையே, நெஸ்லே இந்தியாவில் சர்க்கரை சேர்க்காத செரிலாக் வகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. 2024-ல் அறிமுகமான இந்த மாற்றம், நுகர்வோர் எதிர்பார்ப்புகள் நிறுவனங்களின் தயாரிப்பு மாற்றங்களைத் தூண்டுகிறதா என்ற கேள்வியை எழுப்புகிறது.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories