நர்மதா:
இந்தியாவின் ஐந்தாவது பெரிய நதியாக நர்மதா நரி உள்ளது. இது தோராயமாக 1,312 கிலோமீட்டர் தூரத்தை கடந்து செல்கிறது. நர்மதா நதி மத்திய இந்தியாவில் ஒரு முக்கிய நதி. மத்திய பிரதேசத்தில் உள்ள அமர்கண்டக் பீடபூமியில் இருந்து உருவாகும் இந்த நதி, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்கள் வழியாக மேற்கு நோக்கி பாய்ந்து அரபிக்கடலில் கலக்கிறது.
தவா, பர்னா, ஷக்கர் மற்றும் ஹிரன் ஆறுகள் நர்மதா நதியின் முக்கிய துணை நதிகள். நீர்ப்பாசனம், நீர் மின் உற்பத்தி மற்றும் நீர் விநியோகத்திற்காக இந்த ஆற்றில் பல அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்கள் கட்டப்பட்டுள்ளன. நாட்டின் பிரபலமான சர்தார் சரோவர் அணையும் குஜராத்தில் இந்த நதியில் அமைந்துள்ளது.
ரயில் டிக்கெட்டின் H1, H2: முன்பதிவு செய்யப்பட்ட உங்கள் இருக்கையை ஈசியா கண்டுபிடிக்க இதை பாலோ பண்ணுங்க
சிந்து:
இந்தியாவின் 7-வது பெரிய நதியாக சிந்து நதி இருக்கிறது. திபெத்திய பீடபூமியில் உள்ள மானசரோவர் ஏரியிலிருந்து உருவாகும் இந்த நதி லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீரின் சில பகுதிகள் வழியாக பாய்ந்து பாகிஸ்தானை அடைந்து இறுதியில் அரபிக்கடலில் கலக்கிறது. சிந்து நதியின் மொத்த நீளம் 3,180 கிலோமீட்டர்கள்.
பிரம்மபுத்திரா:
நாட்டின் ஏழாவது பெரிய நதியான பிரம்மபுத்திரா நதி, இமயமலையில் கைலாஷ் மலைக்கு அருகிலுள்ள செமாயுங்டுங் பனிப்பாறையிலிருந்து உருவாகிறது. இப்பகுதி சீனாவில் உள்ளது. பிரம்மபுத்திரா நதியின் மொத்த நீளம் தோராயமாக 2,900 கிலோமீட்டர்கள் ஆனால் இந்த நதியின் 918 கிலோமீட்டர்கள் மட்டுமே இந்தியாவில் உள்ளது.
பிரம்மபுத்திரா அருணாச்சல பிரதேசம் வழியாக இந்தியாவிற்குள் நுழைகிறது. அம்மாநிலத்தில் அது சியாங் நதி என்று அழைக்கப்படுகிறது. இது கங்கை மற்றும் மேக்னா நதிகளுடன் ஒன்றிணைந்து வங்காள விரிகுடாவில் விழுவதற்கு முன் உலகின் மிகப்பெரிய டெல்டாவான சுந்தரவன டெல்டாவை உருவாக்குகிறது.